சிரிய மக்களின் வாழ்வு அமைதியாகத்தான் சென்றது
சிரிய மக்களின் வாழ்வு அமைதியாகத்தான் சென்றது, அரசின் மீது அவர்களுக்கு பெரும் அதிருப்தி என சொல்லமுடியாது. அரபுகளில் அவர்கள் கொஞ்சம் சுதந்திரம் விரும்பிகள், துருக்கி அருகில் இருப்பதால் அந்த பாதிப்பு உண்டு
2011களில் அரபு நாடுகளில் புரட்சிகள் வந்தது, லிபியா, எகிப்து, டுனிஷியா என பல நாடுகள் பொங்கின. பஹ்ரைன் கூட கொந்தளித்தது
ஆனால் சிரியாவில் அமைதியே நிலவிற்று. மக்கள் கொந்தளிக்கவில்லை மாறாக ஆயுதகுழுக்களே தோன்றின, அவற்றிற்கு எண்ணெய் ஊற்றி எரிய வைக்க அந்நிய சக்திகள் வந்தன
மக்களுக்கு விருப்பம் இல்லாமலே போராட்டம் தொடங்கிற்று, சிரிய அரசு இன்றுவரை கவிழாமல் இருக்க மக்கள் அரசை மாற்ற விரும்பாததே காரணம்
இடையில் அந்நிய சக்திகளின் போராளிகள் வலுகட்டாயமாக யுத்தம் நடத்தியதே இவ்வளவு அழிவிற்கும் காரணம்
உலகில் அமெரிக்காவிற்கு 100க்கு மேற்பட்ட ராணுவ முகாம் உண்டு, மிக பெரியவை அது. அமெரிக்கா என்பது வல்லரசாக நிலைக்க அவை இருந்தே தீரவேண்டும்
ஆனால் ரஷ்யாவிற்கு உலகில் இருக்கும் ஒரே ராணுவதளம் சிரியாவில் உள்ள கடற்படை தளம். போராளிகளின் இலக்கும், ஐஎஸ் இயக்க இலக்கும் அதனை நோக்கி வரும்பொழுது, ரஷ்ய முகாமை காலிசெய்வது போல் வந்தபொழுது ரஷ்யா சுதாரித்தது
இடையில் ஐஎஸ் இயக்கத்தை எதிர்க்க குர்துகளை உலக நாடுகள் கொம்பு சீவி விட, எங்கே குர்துகளுக்கு தனிநாடு கிடைத்தால் தங்கள் நாட்டில் உள்நாட்டு போர் வருமோ என அஞ்சிய துருக்கி களத்தில் இறங்கியது
இப்படியாக பல விஷயங்களால் அழிகின்றது சிரியா
இப்பொழுது அந்த போராளிகளை துடைத்துவிட்டு முழு சிரியாவும் அதிபர் கைக்கு வரும் நிலை வந்திருக்கின்றது. இனி போரில் வெல்லமுடியாது, விட்டால் மொத்த தங்கள் வளர்ப்பு தீவிரவாதிகளும் அழிவதற்குள் அவர்கள் கட்டுபாட்டு சிரியாவினை தனிநாடாக்க அவசரமாக முயற்ச்சிக்கின்றது அமெரிக்கா
ஆனால் சிரியா விடுவதாக இல்லை, ரஷ்யா அதனை பாதுகாக்கின்றது
ஒரு நாட்டில் மக்கள் முழுக்க பங்குபெறாத எந்த போராட்டமும் வெற்றிபெறாது. ஆயுதம் தாங்கிய கும்பல்கள் அந்நிய சக்திகளுடன் செய்யும் போராட்டம் பிரமாண்டமாக காட்டபடுமே தவிர அவை எல்லாம் வெற்று பலூன் என்பதையும் சிரியா காட்டுகின்றது
ஈழத்திலும் இதே நிலைதான் கிட்டதட்ட இருந்தது. மொத்த தமிழக மக்கள்தொகை 15 லட்சம் இருந்தாலும், போராளிகள் என கிளம்பியது 5ஆயிரம் பேர்கூட இருக்கமாட்டார்கள்
அவர்களுக்கு காம்பிளான் ஊற்றி வளர்த்தன வெளிநாடுகள், அவைகள் செய்வது பெரும் சாகசம் போல காட்டபட்டன
ஆனால் மக்கள் பயந்து கப்பம் கட்டினார்களே தவிர, போருக்கு அவர்கள் தயார் இல்லை. மொத்தமாக திரண்டு போராட அவர்கள் தயாரில்லை
ஈழத்து மொத்தமக்களும் கிளர்ந்தெழுந்திருந்தால் என்றோ ஈழம் கிடைத்திருக்கும் ஆனால் அப்படி எல்லாம் நடக்கவில்லை, அவர்கள் விரும்பவுமில்லை
சமயம் பார்த்து மொத்தமாக புலிகளை அழித்தது இலங்கை, இன்று சிரியாவும் அதனையே செய்கின்றது
மொத்த மக்களும் விரும்பாத நாட்டில் அந்நிய சக்திகள் வலுகட்டாயமாக வளர்க்கும் தீவிரவாதம் வெற்றிபெறாது என்பது வெளிதெரியும் நேரமிது
தன்முயற்சி எல்லாம் தோற்கும் நிலையில், சிரியாவிற்கு அபாய ரசாயாண ஆயுதங்களை கொடுப்பது வடகொரியா என அமெரிக்கா புலம்ப ஆரம்பித்துவிட்டது
விடுமா வடகொரியா?
“என்னிடம் ரசாயாண ஆயுதம் இல்லை, ஆனால் அணுகுண்டு இருக்கின்றது அமெரிக்கா மீது வீசட்டுமா?” என வடகொரிய சீஸ் பூசனி சீற விஷயம் வேறு வகைக்கு செல்கின்றது.