சிஸ்டத்தை சீரமை சீமந்த புத்திரனே…
தானும் கவிஞர் என நிரூபிக்க உருக்கமான கவிதைகளை எடுத்துவிட தொடங்கிவிட்டார் வைரமுத்து
இவர் கவிஞர் என யாருக்கு தெரியாது?
6 வருட சிரியபோருக்கு இப்பொழுது கவி வடிக்கின்றார், 1 வருடமாக பேசாமல் இருக்கும் கலைஞரை நோக்கி இப்பொழுது கவிதை படிக்கின்றார்
என்ன ஆயிற்று?
ஆண்டாள் கோஷ்டிகள் பிடரியில் அடித்தபின்பு மயங்கிய வைரமுத்துவிற்கு நினைவு வந்தபின் கலைஞர் நினைவு வந்திருக்கின்றது. கலைஞர் இருந்தால் இப்படி நிலை வந்திருக்குமா என கலங்கி தன் பிடரியினை தொட்டுபார்த்து “பிடர் கொண்ட சிங்கமே” என கவிபாடிவிட்டார்
இன்னும் என்னென்ன கவிதைகள் வருமோ தெரியாது, ஆனால் தினமும் ஒன்று இரண்டு வரும் போல
அடுத்த கவிதை “சிஸ்டத்தை சீரமை சீமந்த புத்திரனே” என ரஜினியினை பார்த்து வரலாம்.
சினேகன் என்பரை கமலும், மனுஷ்ய புத்திரன் என்பவரை ஸ்டாலினும் முன்னிறுத்த தொடங்கியதில் மனிதர் கடுமையாக பாதிக்கபட்டது தெரிகின்றது
ராகுல்காந்தி என்றொருவர் இருப்பதோ, காங்கிரஸ் என்றொரு கட்சி இருப்பதோ திரிபுரா ஏரியா மக்களுக்கு தெரியாமல் போனதுதான் ஆச்சரியம்
அங்கும் தமிழகம் போல ஏகபட்ட கோஷ்டிகள் இருக்கலாம்
யார் சொல்வதையும் நம்பாமல் ராகுல் தானே களமிறங்குவதை தவிர காங்கிரஸை காப்பாற்ற முடியாது
பாஜக தொடர்ந்து வெற்றிபெறும் : தமிழிசை
தமிழ்நாட்டுக்கு அந்தபக்கம் என சொல்ல அக்கா மறந்துவிட்டார்