பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு : எச்.ராசா

கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு : எச்.ராசா

1917 ரஷ்ய புரட்சியே வெள்ளையனை அலற செய்தது. அதுவரை உலகில் மன்னராட்சி தவிர எதுவும் சாத்தியமில்லை. அந்த மமதையிலே பிரான்ஸ் அரசனும், பிரிட்டிஷ் அரச குடும்பமும் உலகின் சரிபாதியினை ஆண்டன‌

முன்பாக மன்னராட்சியில் இருந்து மக்களாட்சிக்கு திரும்பிய பிரான்ஸை மறுபடியும் மன்னராட்சிக்கு திருப்பினான் நெப்போலியன், அதிலிருந்து மக்களாட்சி குழப்பம்நிறைந்தது என்ற கருத்து இருந்தது.

அமெரிக்கா அன்று மக்களாட்சி என சொல்லிகொண்டாலும் உலக அரங்கில் அதிகாரமில்லா நாடு

ஜார் மன்னனை ரஷ்ய கம்யூனிஸ்டுகள் தூக்கி எறிந்ததில் உலக மன்னர்கள் விழித்தனர். போதிய உரிமை கொடுக்காத மக்கள் அரசை தூக்கி எறிவர் என்ற அச்சத்தில் உரிமை கொடுக்க தொடங்கின‌

உலக அரசுகளும், சுரங்க தொழில், ஆலை தொழில் முதலாளிகளும் தொழிலாளர் நலம் பேணியது அதன் பின்புதான்

இதன் பின்புதான் சைமன் குழு, மாண்டெகு சேம்ஸ்போர்டு குழு எல்லாம் இந்தியா வந்தது, மக்களுக்கு உரிமை கிடைத்து உள்ளாட்சிதேர்தல் எல்லாம் நடந்தது அதன் பின்புதான்

உலகிற்கு ஒளி கம்யூனிசமே கொடுத்தது, ஹிட்லர் அதனை வெறுத்தான். ஆரிய தலைவனே உலகாள தகுதிகொண்டவன் என சீறினான்

அன்று அவனை எதிர்க்கும் சக்தி ஐரோப்பாவில் எவனுக்குமில்லை, பிரிட்டனை பிடிக்கும் சக்தி அவனுக்கு இருந்தது, அப்படி பிடித்திருந்தால் இந்தியா ஹிட்லரின் அடிமை ஆகியிருக்கும், காந்திக்கெல்லாம் யூத வதைமுகாமில் முடிவும் இருந்திருக்கும்

ஆம், ஹிட்லர் லண்டனை பிடித்தால் அதுதான் நடந்திருக்கும் அவனோ சோவியத்தை ஒழிக்க சென்றான்

தன் விஷவாய்வு முகாமினை அவன் யூதர்களுக்காக மட்டும் கட்டவில்லை, கம்யூனிஸ்டுகளையும் அதில் கொல்லும் திட்டம் அவனுக்கு இருந்தது

அந்த படுபாதகன் ஐரோப்பா முழுக்க பிடித்து கொக்கரித்தான், அவனை எதிர்த்து போராடியது கம்யூனிசம் ஆம் அதுதான் இந்தியாவினை ஹிட்லரிடம் இருந்து காத்தது

ஹிட்லரின் ஆரிய கொடியினை வீழ்த்தி, ஹிட்லரை சாய்த்து உலகை காத்தது செங்கொடி

அதன் பின் உலகில் சரிபாதி நாட்டில் செங்கொடி பறந்தது

இந்தியா மீது கம்யூனிச ரஷ்யாவிற்கு எப்போதும் அனுதாபம் இருந்தது, பல போர்களில் அது ஆதரவளித்தது

கென்னடியுடன் அது முறுக்கிய காலத்தில்தான் மாவோ இந்தியா மீது படையெடுத்தான், கென்னடி சர்ச்சையில் சோவியத் சிக்க்கிய காலத்திலே அக்கொடுமை நடந்தது இல்லாவிட்டால் அந்த போர் நடந்திருக்காது

1972 வங்க போரில் அமெரிக்க படை களமிறங்க, சோவியத் மிரட்டலிலே அது பின் வாங்கிற்று இல்லாவிட்டால் பாகிஸ்தான் உடைந்திருக்காது

1980களில் ஆப்கனில் சோவியத் படைகள் இருந்தவரை நமக்கு பெரும் பாதுகாப்பு, காஷ்மீரில் இவ்வளவு கலவரம் நடந்ததா? நிச்சயம் இல்லை

காரணம் அந்த செங்கொடி

இந்தியாவிற்கு ராணுவம், மருத்துவம் என பல விஷயங்களை கொடுத்த சோவியத் யூனியனே நம்மை விண்வெளிக்கும் அழைத்து சென்றது, ராகேஷ் சர்மா அப்படித்தான் பறந்தார்

அதன்பின் இன்னொரு இந்தியன் இன்னும் பறக்கவில்லை (கல்பனா அமெரிக்க குடியுரிமைபெற்றவர்)

கம்யூனிசம் இந்த உலகிற்கு வழங்கிய கொடை ஏராளம்

தொழிலாளர் நலம், ஓய்வூதியம், 8 மணி நேர வேலை, இன்ன்னும் ஏராளமான விஷயங்கள் அவர்களாலே உலகில் சாத்தியமாயின‌

கம்யூனிசத்திற்கும் உலகிற்கும் ஏக தொடர்பு உண்டு. இந்த உலகை புரட்டி போட்டது கம்யூனிசம்

ஒவ்வொரு இந்தியனும் கம்யூனிசத்தால் நேரடியாக அல்லது மறைமுகமாக பலனடைந்திருக்கின்றான் மறுக்க முடியாது

லெனின் ரஷ்யாவிற்கு மட்டுமல்ல , உலகிற்கே பொதுவானவர் இவ்வுலகம் அவரால் பெற்றுகொண்ட நன்மைகள் ஏராளம்

இதெல்லாம் யோசித்தால் புரியும்

யோசிக்க மூளை வேண்டும், கொஞ்சமேனும் மூளையே இல்லாத எச்.ராசா என்பவருக்கு இதெல்லாம் எப்படி புரியும்?

இந்து நண்பர்கள் மீது எப்பொழுதும் நல்ல அபிமானம் உண்டு, ஆனால் இது போன்ற அலப்பறைகளால் அவர்களுக்கும் அவமானம்

அதனால் இந்துக்களே, இவரை கமல், ரஜினி அல்லது டி.ராஜேந்தர் கட்சிக்கு அனுப்பிவிடுங்கள். இவரின் அறிவுக்கும் திறமைக்கும் இருக்கவேண்டிய இடம் அதுதான்

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications