இலங்கை கண்டி மாவட்டத்தில் கலவரம்
இலங்கை கண்டி மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டாயிற்று, அடிதடி சாவு, ஊரடங்கு உத்தரவு என்ற நிலை வந்தாயிற்று. வழக்கமாக இலங்கையில் யாரும் தும்மினாலே இங்கு “டண்டனக்கா “ஆடுபவர்கள் யாரும் இப்பொழுது சத்தம் இல்லை ஏன்?
இந்த சண்டை தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கும் சிங்களர்களுக்குமானது
இவர்கள் இருவரையும் ஈழதமிழர்களுக்கு பிடிக்காது அதனால் இங்கு பூரண அமைதி
இனி தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் அவர்களுக்காக கொடிபிடிக்கலாம், பெரும் ஆர்பாட்டம் நடத்தலாம்
அதற்கு இலங்கை தமிழரிடமிருந்து சுத்தமாக ஒரு வரவேற்பும் இருக்காது
இவ்வளவிற்கும் இலங்கை முஸ்லீம்கள் தமிழ்பேசுபவர்கள், ஆனால் தமிழராக மாட்டார்கள்
ஏன் என்றால் அங்கு அப்படித்தான். ஈழதமிழனை அடித்தால் மட்டுமே அது தமிழின ஒழிப்பு
இஸ்லாமிய தமிழனையோ, மலையக தமிழனையோ சிங்களன் அடித்தால் தமிழ்நாட்டில் ஒரு குரலும் வராது, ஈழதமிழனும் அதை கண்டுகொள்ளமாட்டான்
ஆம் அங்கு பொறுத்தவரை வடக்கத்திய ஈழதமிழன் மட்டுமே தமிழன, அவனை அடித்தால் மட்டுமே அது தமிழன் மீதான சிங்கள இனவெறி கொடுமை
இதோ தமிழ்பேசும் இஸ்லாமியரை போட்டு அடிக்கின்றார்கள், கடும் கலவர சூழலில் அவசரநிலை எல்லாம் அறிவித்தாயிற்று
நிலமை படுமோசமாக இருக்கின்றது
இங்கு ஒரு குரல் கேட்குமா? கேட்காது
சைமன், திருமா, திருமுருகன், வைகோ என எவனாவது பேசுவார்களா? இல்லை
ஏன் என்றால் இவர்கள் பேச படியளக்க வேண்டும். அதுவும் வசதியான ஐரோப்பா ஈழதமிழரிடம் இருந்து வரவேண்டும் இவர்கள் பேசுவார்கள்
கிழக்குவாழ் இஸ்லாமிய தமிழ்பேசும் தமிழனிடம் இருந்து இவர்களுக்கு என்று தட்சனை வந்தது?
அதனால் இவர்களிடமிருந்து இதற்கெல்லாம் கண்டனம், ஆர்ப்பாட்டம் என எதுவுமே வராது,
தமிழ்பேசினால் அவன் தமிழனா என்ன? அரைகாசு கொடுக்காத அவர்கள் தமிழனாய் இருந்தென்ன லாபம்? செத்து தொலையட்டும் என அவர்கள் போக்கில் இருப்பார்கள்.