எங்களைத் தாண்டி பெரியார் சிலையின் நிழலைக் கூட தொட முடியாது : குஷ்பு ஆவேசம்

அப்படி சொல்லுங்கள் ராசாத்தி
இந்த முதல்வர், எதிர்கட்சி தலைவர் இன்னும் புதிதாக வந்த ரஜினி , கமல், அழிச்சாட்டிய திருமா கோஷ்டி என யாரும் தில்லாக பதில் சொல்லா நிலையில் மிக துணிச்சலாக சவால் விடுகின்றார் தலைவி
தங்க தலைவி என ஏன் அவரை கொண்டாடுகின்றோம் என்றால் இதற்காகத்தான், இந்த மாபெரும் துணிச்சலுக்குத்தான்
எங்களின் உயிரும் தமிழகத்தின் விடிவெள்ளியுமான தலைவியே
அவர்கள் உங்களை மீறி சிலையினை தொடுவது இருக்கட்டும், முதலில் எங்களை தாண்டி அல்லவா உங்களிடம் வரவேண்டும்
விடுவோமா? சங்கமும் அதன் மாபெரும் படையும் எதற்கு இருக்கின்றது?
மாபெரும் பாதுகாப்பு வளையம் அமைத்து உங்களை காப்போம், நீங்கள் பெரியார் சிலையினை காத்து நில்லுங்கள்
ஆணையிடுங்கள் தாயே, நொடிக்குள் இந்த இம்சைகளை அடித்து உத்திரபிரதேசத்திற்கே அனுப்பிவிடுகின்றோம்
திராவிட பெண்போராளியாக அட்டகாச துணிச்சலொடு வந்து நிற்கும் தலைவிக்கு சங்கம் தலைவணங்கி வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானசெருக்கும் இருப்பதால்” அவரே இன்றைய பாரதி கண்ட கனவு பெண் என்பதில் சங்கம் பெருமை கொள்கின்றது
அவருக்கு முழு ஆதரவும் பாதுகாப்பும் வழங்க சங்கம் போர்கோலம் பூண்டுவிட்டது.
யோவ் எச்.ராசா, தலைவி சவாலை ஏற்று ஒழுங்காக சிலை உடைக்க வரும் தேதியினை சொல்லும், நீர் நல்ல இந்துவாக இருந்தால் சொல்லிபாரும்
இல்லாவிட்டால் தமிழகத்தை நீர் காலி செய்யவேண்டிய கடைசி தேதியினை சங்கம் சொல்லும்.
இந்த இரண்டை தவிர உமக்கு வேறு வாய்ப்பே இல்லை
தமிழகத்தை கலவரகாடாக மாற்ற ராசா தரப்பு முயல்வதாலும், தலைவிக்கு ஏற்கனவே அச்சுறுத்தல் இருப்பதாலும் அவருக்கு அரசு பாதுகாப்பு வழங்கவேண்டும் என சங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றது.
அப்படி அரசு வழங்கா பட்சத்தில் சங்கம் முழுபாதுகாப்பையும் கொடுக்கும் எனவும் முடிவு செய்யபட்டிருக்கின்றது