லெனின் போன்றவர் சிலைகள் இங்கு இருக்க கூடாதாம்…..

Image may contain: one or more people

இந்தியாவில் பிறந்த காந்திக்கும், விவேகானந்தருக்கும் உலகெல்லாம் சிலை இருக்கலாம்

அதில் விவேகானந்தர் சிலையினை மோடியே மலேசியா போன்ற நாடுகளில் திறக்கலாம்

ஆனால் லெனின் போன்றவர் சிலைகள் இங்கு இருக்க கூடாதாம்

Image may contain: outdoor and textஆப்கானிய தாலிபான்கள் புத்தரின் சிலையினை இடித்ததற்கும் இவர்கள் லெனின் சிலையினை உடைத்ததற்கும் வித்தியாசம் ஏதுமில்லை

புனிதமான இஸ்லாம் மதம் காட்டுமிராண்டி கலாச்சாரம் கொண்ட ஆப்கானியரிடம் சிக்கி தன் பெருமைக்கு இழுக்கானது, அப்படியே அவர்களின் தொடர்ச்சியான வட இந்தியர்களிடம் சிக்கி மிக புனிதமான இந்துமதம் களங்கத்தை தேடிகொண்டிருக்கின்றது

இது நிச்சயம் மதங்களின் சிக்கல் அல்ல, அதை சரிவர பின்பற்றா இம்மனிதர்களின் சிக்கல்

காந்தி, லெனின், புத்தன், விவேகானந்தர் எல்லாம் எல்லை இல்லா உலக அடையாளங்கள்

லெனின் வேண்டாமாம், ஆனால் அவன் தேசம் கொடுத்த பிரம்ம்மோஸ் ஏவுகனைகளை, அவன் உருவாக்கிய ரஷ்யா கொடுத்த சுகோய் போன்ற நவீன விமானங்களை எல்லாம் வாங்குவார்களாம்

நிர்மலா சீதாராமன் மாஸ்கோ சென்று எஸ ‍- 400 எனும் நவீன வான்பாதுகாப்பு சாதனம் வாங்க கையொப்பம் இட போகின்றாராம்

ஆம் அங்குதான் லெனினின் மசோலியன்ம் இருக்கின்றது, அவன் அழியா உடல் அங்குதான் இருக்கின்றது

இங்கு அவன் சிலையினை இடித்துவிட்டு அவன் நினைவாலையம் முன் மாஸ்கோவில் நவீன‌ விஞ்ஞான கருவி வாங்க காத்துகிடக்க கொஞ்சமேனும் பாஜகவினருக்கு உறுத்தவில்லை?

கொஞ்சமேனும் மானமில்லை

அவன் கடவுளை தாண்டி, மதங்களை தாண்டி உருவாக்கிய தேசத்தின் விஞ்ஞான வளர்ச்சிதான் இன்று இந்திய பாதுகாப்பின் ஏவுகனையாக, விமானமாக, விண்வெளி பாதுகாப்பு சாதனமாக வந்து நிற்கின்றது

இந்தியாவினை அப்படி வளர்த்துவிட்டு லெனின் சிலையினை இடியுங்கள்

S- 400 எனும் பாதுகாப்பு சாதனம் சாதாரணம் அல்ல, ஏவுகனை , விமானம் , கப்பல் என 6 வழியில் வரும் ஆபத்துக்களை தடுக்கும் மாபெரும் விஷயம் அது

பன்னெடுங்கால உறவில் அந்த நவீன அம்சத்தை ரஷ்யா இந்தியாவிற்கு வழங்குகின்றது

எங்கே மானமுள்ள பக்தர்கள் என்றால் லெனின் தேசத்து ஆயுதம் எமக்கு வேண்டாம், திரிசூலம் , வாள், ஈட்டி ஏந்தி சீன ஏவுகனைகளை தடுப்போம் என சொல்லுங்கள் பார்க்கலாம்