பிற்படுத்தபட்டவருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்திருக்கின்றது
மருத்துவ மேற்படிப்பில் 27% என்றிருந்த பிற்படுத்தபட்டவருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்திருக்கின்றது
எப்பொழுது என்றால், எச்.ராசா பெரியார் சிலையினை இடிப்போம் என சர்ச்சை கிளப்பிய நேரத்தில்
அட்டகாசமான திட்டமிது
தமிழ்நாட்டு கவனத்தை வேறுபக்கம் திருப்பிவிட்டு மிக நுணுக்கமாக இந்த அறிவிப்பினை செய்திருக்கின்றார்கள்
பெரியார் சிலையினை காக்க கிளம்பிய தமிழகம் பெரியாரின் கொள்கையினை தகர்ப்பதை கவனிக்காமல் விட்டுவிட்டது
விஷயம் கொஞ்சம் வீரியமாகின்றது
முதல் போராட்டத்தை பாமாக நடத்துகின்றது. என்ன இருந்தாலும் இம்மாதிரி விஷயங்களில் ராமதாஸை பாராட்டாமல் இருக்க முடியாது
மற்ற கட்சிகள் இன்னும் வாய்திறக்கவில்லை. பழனிச்சாமி திறக்கவே மாட்டார். ஸ்டாலின் மெதுவாக திறக்கலாம். மய்யமும் சிஸ்டமும் இந்த பக்கமே வராது
ராமதாஸ் மட்டும் எதிர்ப்பு குரலை பலமாக கொடுக்கின்றார், நிச்சயம் நடந்திருப்பது மாபெரும் அநீதி 27% இடஒதுக்கீட்டை ஒரே நாளில் ரத்து செய்வது என்பது அக்கிரமத்தின் உச்சம்
ராமதாஸின் குரல் தமிழகமெங்கும் பரவட்டும், பெரும் எதிர்ப்பு எழும்பட்டும்
இப்படி சில காரியங்களில் ராமதாஸ் அசத்துவார், ஆனால் காடுவெட்டி குருவினை அருகில் வைத்து காட்சியளிக்கும்பொழுது எல்லாவற்றையும் கெடுத்துகொள்வார்
இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுதான்
தமிழக பாஜகவினர் யாரும் கோமாளிகள் அல்ல, வெறுப்பாளர்களும் அல்ல. தமிழகத்தில் சில சலசலப்புகளை ஏற்படுத்த டெல்லி சக்திகளால் மிக சரியாக பயன்படுத்தபடும் ஆயுதங்கள்
காரணமில்லாமல் ராசா, தமிழிசை எல்லாம் வாய்திறப்பதில்லை. இவர்கள் சலசலப்பினை ஏற்படுத்தும் ஒவ்வொரு நேரத்திலும் ஏதோ வில்லங்கத்தை டெல்லி ரகசியமாக செய்துகொண்டே இருக்கின்றது