குரங்கணி காட்டுத்தீ விபத்து
இந்தியா ஒருவிஷயத்தில் சபிக்கபட்ட நாடு, தமிழ்நாடு அதில் இன்னும் மோசம்
ஆம், ஒவ்வொரு ஆபத்தின் விளைவுகளையும் சில உயிர்களை பலிகொடுத்தபின்பே அதன் தீவிரத்தை உணருமே தவிர ஒரு நாளும் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்காது
அது முன்பு ஓலை திரைகொட்டகை எரிந்து ஏராளமானோர் எரிந்தது, கும்பபோண வடுவான அந்த சம்பவம் வரிசையில் இந்த தேனி மலைக்காடும் சேர்ந்துகொண்டது
மலைக்காடு என்பது எப்பொழுதும் பச்சையாய் இருப்பது அல்ல, அங்கும் வறட்சி உண்டு அந்த வறட்சியில் யாரேனும் அல்லது மூங்கிலோ இடியோ தீயினை ஏற்படுத்திவிடுவதும் உண்டு
அது அடங்கா தீ, ஆவேசமாக எரியும். வன விலங்குகள் நுண்ணறிவு மிக்கவை பெரும்பாலும் தப்பிவிடும். இப்பொழுது சிக்கி இருப்பது மனிதர்கள்
எப்படி சென்றார்கள்?
இப்பொழுதெல்லாம் மனிதனின் உழைப்பு காங்கரீட் சுவற்றுக்குள் நடக்கும் கொத்தடிமை முறை என்பதால் அவர்களை வருடம் ஒருமுறை எங்கேனும் அழைத்து சென்று நாமெல்லாம் ஒரே குடும்பம் என விளையாட விடுவது அவர்களுக்கு பொழுதுபோக்கு, அப்படியே செலவு கனக்கும் எழுதி வரியிலிருந்து தப்பலாம்
இதில் கடற்கரை, உல்லாச தளம் போல இந்த மலையேற்றமும் ஒன்று. இதில் பல வகை உண்டு
மிக பாதுகாப்பான மலையில் சில அடிகள் ஏறுவது ஒரு வகை, காட்டுக்குள் சென்று இது இயற்கை வாழ்க்கை என ஒரு நாள் தங்கி இருந்து வருவது இன்னொரு வகை. இதெல்லாம் இப்பொழுது பணம் கொட்டும் தொழில், நடு மலையில் அரசின் அனுமதி பெற்றோ பெறாமலோ நடக்கும் தொழில்
இவர்கள் மலை ஏற்றமா ? இல்லை காட்டில் இயற்கை வாழ்வு வாழ சென்றவர்களா என்பது பற்றியெல்லாம் தகவல் இல்லை
இங்கு வனவிலங்குகள் தொந்தரவு அதிகம் இருக்காது. என்றுமே வன விலங்குகள் மனித நடமாட்டம் தொடங்கியவுடன் வேறு இடம் நகரும். முடியாத பட்சமே தாக்குமே தவிர மற்றபடி அவை வேறு இடம் சென்றுவிடும்
இம்மாதிரி தனியார் ரிசார்ட்டுகள், மலையேற்ற விளையாட்டுகள் செலவு அதிகம் என்பதால் இவர்களின் குறி ஐடி கம்பெனி போன்ற அதிகம் பணம்புழங்கும் கம்பெனிகளாக்வே இருக்கும்
அப்படி சென்னையில் இருந்து சில பணியாளர்களை ஒரு நிறுவணம் அழைத்திருக்கின்றது, அவர்கள் மலையேறும் விளையாட்டு விளையாடிய பொழுதுதான் தீப்பிடித்திருக்கின்றது
அதுவும் தீ தொலைவில் பிடித்த உடனே இவர்களை அந்த நிறுவணம் உடனே வெளியேற்றியிருக்க வேண்டும், மாறாக ஏன் தாமதபடுத்தினார்கள் என்பது தெரியவில்லை
தீ வேகமிக்கது, ஆனால் இது கிட்டதட்ட 6 நாட்கள் எரிந்தபின்புதான் இப்பக்கம் வந்திருக்கின்றது என்பதால் அந்த டுரிஸ்ட் நிறுவணமும் அவர்களுக்கு பொறுப்பாக இருந்தவர்களே இந்த மாபெரும் கொடுமைக்கு காரணம்
ஆக இந்த தீயில் வெந்து பலர் இறந்தபின்புதான் அது அங்கீகாரம் பெற்ற நிறுவணமா? அந்த இடம் அரசு இடமா? தனியார் இடமா? இவை எல்லாம் மக்கள் அனுமதிக்கபட்ட பகுதியா என்ற கவலையே அரசுக்கு வந்திருக்கின்றது
அதுவரை அப்படி ஒரு பகுதி தமிழகத்தில் இருப்பதாக அரசுக்கு தெரியவே இல்லை. இவ்வளவிற்கும் துணை முதலமைச்சர் அந்த பக்கத்துக்காரர்
ஆனால் இவ்விஷயத்தில் அரசினை உடனே சாடுவது சரியல்ல , காரணம் காட்டு தீ என்பது ஆனானபட்ட அமெரிக்கா , ஆஸ்திரேலியாவினையே ஆட்டிவைக்கும் விஷயம்
அவ்வகையில் மத்திய அரசு விஷயம் கேள்விபட்டவுடன் விமான சகிதம் மீட்பு விமானங்களை அனுப்பியயது நல்ல விஷயம். அதன் கடமையினை செய்தது
மாநில அரசு இந்த நிறுவணங்களை அனுமதித்ததா இல்லையா என்பது இப்போது விவாதிக்கும் விஷயம் அல்ல, மாறாக அந்த நேரத்தில் தாங்களின் பொறுப்பில் இருந்த அந்த பணியாளர்களை வெளியேற்றாமல் இருந்தது, ஆபத்து நேரத்தில் வெளியேறும் வழியினை யோசிக்காமல் இருந்தது
காலையில் இருந்து செய்திகள் வருகின்றன, எத்தனை பேர் செத்தனர் என்றே தகவல் வருகின்றதே தவிர. அந்த மலையேற்ற நிறுவணம் யாருடையது என்பதோ, இவர்களை அழைத்து சென்று தீயில் இருந்து மீட்காமல் விட்டது யார்? என்ற தகவல் இன்னும் வரவில்லை
வரவும் வராது
கும்பகோணம் தீவிபத்தில் செத்த குழந்தைகளுக்கும் இங்கு தீயில் செத்தவர்களுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை இரண்டுமே அந்த நிறுவணங்களை நடத்தியவர்கள் தவறு
இங்கு இன்னொரு விஷயம்தான் பகீர் என்கின்றது
பொதுவாக இம்மாதிரி காடுகளில் போட்டோ எடுக்கின்றேன் பேர்வழி என உள்நாடு , வெளிநாட்டுகாரர் எல்லாம் தங்குவார்கள். சும்மா அல்ல மாதகணக்கில் தங்குபவரும் உண்டு. வைல்டு போட்டோ கிராபி என்பது அதுதான்
அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ளவும் மாட்டார்கள், எங்கு இருக்கின்றார்கள் என யாருக்கும் தெரியாது, ஆனால் காடுகளில் சுற்றுவார்கள்
அப்படி சுற்றியவர்கள் யாரும் இல்லாமல் இருந்தால் நல்லது
நகரிலிருந்து சென்றவர்களை உறவினர்கள் சகிதம் தேடுகின்றார்கள், நாமும் தேடுகின்றோம்
ஆனால் காட்டுவாசிகள் இருந்திருந்தால் மொத்தமாக கருகி இருப்பார்களே, அவர்களை யார் தேட போகின்றார்கள்?. எனினும் இயற்கையோடு இணைந்து வாழ்பவர்கள் இம்மாதிரி நேரங்களில் தப்பிவிடுவார்கள். பல இடங்களில் அவர்கள் அப்படி தப்பி பிழைத்து வாழ்கின்றார்கள்
இங்கு மலைவாசிகள் இருந்தால் அப்படி தப்பி இருப்பார்கள் என நம்புவோம்
அரசு இந்தமாதிரி மலைவாழ் ரிசார்ட்டுகள் மீது தனி கவனத்தை இனியாவது செலுத்தட்டும்
மலைகள் யாரும் செல்லா பகுதி என்பதால் ஆளாளுக்கு வளைத்துபோட்டு செய்யும் அட்டகாசம் கொஞ்சமல்ல. பெரும் பணக்காரன் எல்லாம் தனி காடே வைத்திருக்கின்றார்கள்
இவற்றை எல்லாம் இனியாவது அரசு கண்டுகொள்ளட்டும்
கடந்த வருடம் கூவத்தூருக்கு பதிலாக இப்படி மலை ரிசார்ட்டில் இந்த எம்.எல்.ஏக்களை எல்லாம் வைத்து, அப்பொழுது தீ பிடித்திருக்கலாம்
சசிகலாவிற்கும் எங்கு வைப்பது என தெரியவில்லை, தீயும் ஏன் கூவத்தூரை விட்டது என தெரியவில்லை. தமிழகத்திற்கு எதிரான இயற்கை சதி என்பது இதுதான்
காங்ரீட் காடுகளில் வாழ்ந்துகொண்டு, இயற்கை காட்டை காண சென்று உயிரையும் விட்டுவிட்ட அந்த அப்பாவிகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
அந்த மலையேறும் நிறுவணத்தையும், இவர்களை அழைத்து சென்ற பொறுப்பாளர்களும் யார் என காட்டவேண்டியது அரசின் கடமை