மகராஷ்டிர விவசாயிகள் பேரணி நாட்டை உலுக்குகின்றது
மகராஷ்டிர விவசாயிகள் ஆயிரகணக்கான விவசாயிகளின் பேரணி நாட்டை உலுக்குகின்றது, சிகப்பு கொடிகளுடன் அவர்கள் கிளம்புவது நாட்டை அதிர்வுள்ளாக்குகின்றது
தமிழ்நாட்டிலும் இப்படி விவசாயிகள் உண்டு. ஆனால் மொத்தமாய் திரள்வார்களா என்றால் இல்லை
பாலாற்று கரை விவசாயிக்கு காவேரிகரை விவசாயி வரமாட்டான், காவேரிகரை விவசாயி பிரச்சினைக்கு மற்ற விவசாயிகள் வரமாட்டார்கள்
மலைபகுதி விவசாயி பிரச்சினைக்கு கோவைக்காரர்கள் வரமாட்டார்கள். கோவை விவசாயி பிரச்சினை கன்னியாகுமரி விவசாயிக்கு புரியாது
தேனி விவசாயி சிக்கல் மதுரை விவசாயிக்கு தெரியாது
ராதாபுரம் விவசாயி ஒரு சொட்டு தண்ணீருக்கு கதறுவது யாருக்கும் புரியாது
இதில் யாராவது உருப்படியாக இருக்கின்றார்களா சம்பாதிக்கின்றார்களா என்றால் இல்லை, ஆனால் ஒற்றுமையாக வரமாட்டார்கள் அதுதான் சிக்கல்
ஆனால் இவர்கள் எல்லாம் போராடுவார்கள், தனி தனியாக போராடிவிட்டு அவர்கள் போக்கில் செல்வார்கள் ஒருவருக்கும் நியாயம் கிடைக்காது
மொத்த அமைப்பாக தமிழக விவசாயிகள் எழாதவரை இங்கு எதுவும் மாறாது, மீணவர் நிலையும் அதுவே
ஆனால் மகராஷ்டிரா விவசாயிகள் மொத்தமாக பொங்குகின்றார்கள். விவசாய கடனுக்கு மராட்டிய அரசு முடிவு சொல்லியே ஆகவேண்டும் என்று போராடுகின்றார்கள்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் எது தெரியுமா?
தமிழக விவசாயிகள் விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என போராடிய அந்த அய்யாகண்ணுவினை கவனிக்கலாம்
இதோ மராட்டிய விவசாயிகள் தங்கள் மாநில அரசை உலுக்க திரளுகின்றார்கள், வேறு வழியினிற் மராட்டிய அரசும் அவர்களுடன் பேச்சு நடத்த இறங்கி வருகின்றது
இதே நெருக்கடியினைத்தான் அய்யாகண்ணு இங்கே கொடுத்திருக்க வேண்டும். மாநில அரசை பேச்சுவார்த்தைக்கு இழுத்திருக்க வேண்டும்
ஆனால் இதனை செய்யாமல் தமிழக அரசை கண்டுகொள்ளமால் அல்லது காப்பாற்றுவது போல் செய்துவிட்டு டெல்லியில் சென்று ஆளவந்தான் கமலஹாசன் போல போஸ் கொடுப்பெதெல்லாம் என்ன வகை?
மாநில அரசினை விட்டுவிட்டு மத்திய அரசையே பிடிப்பேன் எனும் அரசியல்
அதுவும் 100 பேரை மட்டும் கொண்டுபோய் அவர்களை தங்க வைத்து சாப்பாடு கொடுத்து போராட்டம் என்றால் அது கோமாளித்தனம் ஆகாதா?
இதனால்தான் மோடியோ இதர அமைப்போ இவர்களை டெல்லியில் கண்டுகொள்ளாமல், அம்மணமாய் திரிந்தவுடன் அடிக்கவேண்டிய இடத்தில் அடித்து விரட்டினார்கள்
மராட்டிய விவசாயிகள் மராட்டிய அரசுக்கு கொடுக்கும் நெருக்கடியினையும், அய்யாகண்ணு தந்திரமாக மோடி மீது மட்டும் சாடியதையும் கவனியுங்கள்.
இவர் யாரின் கையாள் என்பதையும், யாரை காப்பாற்ற டெல்லிக்கு ஓடினார் என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்
பின் இந்த நபரை பிராடு என சொல்லாமல் புனிதர் என சொல்வார்களா?
அந்த தென்னக வீரதமிழச்சியின் செயலை கைதட்டி வரவேற்கின்றோம்
மராட்டிய விவசாயிகள் கொடுக்கும் அதிரடியில் அய்யாகண்ணுவின் கோவணம் தானாக கிழிகின்றது