பெரியவர், அனுபவசாலி, கிடைத்தற்கரிய மாமனிதர் : மாணிக்கவாசகம் முத்துசாமி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்க்கையில் ஒரு சில பெரியவர்களை பார்க்கும்பொழுது மரியாதை வரும், மிக உயரத்தில் இருந்து கொண்டு அவர்கள் வாழும் எளிய வாழ்வும், எளிதாய் பழகும் குணத்தை கண்டால் சிலிர்ப்பும் வரும்
அவ்வளவு பெரியவர்கள் அமைதியாய் ஆர்பாட்டமின்றி இருக்கையில் நமக்கெல்லாம் எதற்கு ஆட்டம் என யாரோ செருப்பால் அடித்தது போல் சர்வநாடியும் ஒடுங்கும்
நாமும் அப்படி வாழவேண்டும் என்ற எண்ணம் உருவாகும்
அப்படிபட்ட பெரியவர்களில் ஒருவர் Manickavasagam Muthuswamy அவர்கள்.
எங்கள் பகுதியின் முதல் மருத்துவர் அவர்தான். தாழ்த்தபட்ட குலத்தில் இருந்து மருத்துவராக உயர்ந்தவர்.
இன்று தமிழகத்தின் முண்ணணி மருத்துவர்களில் ஒருவர்
நினைத்தால் ஐரோப்பா, அமெரிக்கா என செட்டிலாகும் வாய்ப்பு அப்பொழுதே வந்தது. ஆனால் செல்லவில்லை சென்னையில் தங்கிவிட்டார்
பெரியார், கக்கன், அண்ணா, முத்துராமலிங்க தேவர் என அவர்களோடு இவர் பழகிய நிமிடங்களை அவர் சொல்லி கேட்பதே பெரும் சுகம்.
பழகுவதற்கு மிக இனிமையானவர், தான் பெரியவர் என்றோ, கற்ற மருத்துவர் என்ற பந்தாவோ அவரிடம் துளியுமில்லை
மிக சிறந்த முருக பக்தர். வள்ளியூர் முருகன் கோவிலுக்கு பாண்டிய மன்னர் காலத்திற்கு பின் தனி மனிதனாய் அள்ளிகொடுத்தவர்
பெரும் கல்வி செல்வம் பெற்றிருந்தாலும், பெரிய ஆசை அவருக்கு இல்லை. வரும் வருமானத்தை பங்கிடுவதில் கூட, முருகப்பெருமானை கூட்டாளியாக சேர்த்து கொள்கின்றார்.
எளிமை,இன்சொல்,புன்னகை என வலம் வருபவர், வள்ளியூரை பிரிந்து கிட்டதட்ட 55 வருடங்கள் ஆனாலும் மண்ணை மறக்காதவர்,
எங்கிருந்தாலும் வள்ளியூரை மறக்காத மனங்களில் அவரும் ஒருவர், மறக்காததை விடுங்கள், எல்லா நல்ல காரியத்திற்கும் மறுக்காமல் உதவும் மனம் அவருடையது.
வள்ளியூரை பற்றி சொல்லும் பொழுதெல்லாம் மறக்காமல் தனது தந்தையின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் அவரதுமனது நிச்சயம் விலாசமானது.
கொஞ்சநேரம் அவருடன் பேசினால் அப்படியே 1950களின் காலத்தை கண்ணில் நிறுத்துவார். மிக சிறந்த ஆத்திகர் என்றாலும் பெரியார் என்றால் கண்கள் பனித்துவிடும்
ஆம், தன்னுடைய வெற்றிக்கு பெரியாரும் காரணம் என்பது அவரின் நம்பிக்கை.
இவரது தந்தை ஒவியர், சிற்பி ஏராளாமன சிலைகளை அவர் செய்திருந்தாலும் தன் தந்தை செய்த சிலையில் தனக்கு பிடித்தது பெரியார் சிலை என அவர் சொல்லும்பொழுதே அது தெரிந்தது
யாரையும் தன் பதிவிலும் வார்த்தையிலும் கூட காயபடுத்தா பெருந்தன்மை அவருடையது
அவரிடம் வியக்கும் குணம் ஒன்றுதான்
அவர் பெரும் மருத்துவர், பெரும் மருத்துவ மாநாடுகள் நடத்துமளவு அனுபவம் திறமை கொண்டவர்
ஆனால் ஒருநாளேனும் தன் மருத்துவமனை, பெரும் டாக்டர்கள் என அவர் படம் பதிந்ததில்லை
தான் வளர்க்கும் வாழைமரத்தோடு படமெடுத்து தான் சிறுவயதில் கூலிக்கு வேலை செய்த காலங்களை அவரே அவருக்கு நினைவுபடுத்துகின்றார்.
அந்த வாழை அவருக்கு சோறு போட்டது என்பதை தன் கண்முன்னால் வைத்திருக்க வீட்டில் வாழை மரம் வைத்திருக்கின்றார்
எத்தனை பேருக்கு இந்த மனம் வரும்? நன்றியுள்ள மனம் என்பது அதுதான்.
சில நேரம் ஓவியமும் கையுமாக போஸ் கொடுப்பார் அப்பொழுது அவர் தந்தையின் நினைவில் மூழ்கியிருக்கின்றார் என்பது தெரியும்
ஒரு சொட்டு நகையும் அவர் அணிந்தவரல்ல. பெரும் ஆடம்பர வாகனமும் அவர் ஆசை அல்ல.
தன் வறுமையான இளமைகாலங்களை இன்றும் கண்முன் வைத்திருந்து பெரும் உயரத்திலும் தன்னடத்தோடு இருக்கும் அவரை போன்றவர்கள் இனி வருவது கடினம்
இன்று அவருக்கு பிறந்தநாள்.
பெரியவர், அனுபவசாலி, கிடைத்தற்கரிய மாமனிதர். அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்.
இவ்வளவிற்கும் நான் அவரை நேரில் இன்னும் சந்திக்கவில்லை, அதனால் என்ன?
மலைமீதிருக்கும் விளக்கினை சென்று பார்த்தால்தான் நம்ப வேண்டுமா?
அவர் மிக நம்பி வணங்கும் முருகப்பெருமான் அவருக்கு எல்லா நலன்களும் வளமும் அருளட்டும்.