குரங்கணி விவகாரம் : சென்னை டிரெக்கிங் கிளப்பின் பீட்டர்

Image may contain: one or more people and outdoor

இந்த குரங்கணி விவகாரம் தொடர்பாக சி.டி.சி அமைப்பின் முக்கியமான நபர் பீட்டர் எனும் பெல்ஜியம் மீது ஆளாளுக்கு ஆட்காட்டி விரலை நீட்டியாயிற்று

இந்த பீட்டர் சில ஆண்டுகளுக்கு முன்பே கவனிக்கபட்டார் . வழக்கமாக வெள்ளையர் வந்து மாமல்லபுரத்தில் போட்டோ எடுத்து கேரள போட் ஹவுசில் மல்லாக்க கிடப்பது போல் அல்ல பீட்டர், இங்கு ஏதோ சில நல்ல காரியங்களை செய்ய நினைத்தவர், அவர் இந்தியா வந்து 15 ஆண்டுகள் இருக்கலாம்

ஆரம்பத்தில் மலையேற்றத்தை செய்தவர்தான், சி.டி.சி எனும் சென்னை டிரெக்கிங் கிளப்பினை அவர்தான் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக அது வளர்ந்தது

சென்னையினை அவருக்கு ஏனோ பிடித்துவிட்டது

கிட்டதட்ட 40 ஆயிரம் உறுப்பினர்களை கொண்டிருக்கும் அமைப்பு அது, டிரக்கிங் மட்டும் செய்தவர் அல்ல பீட்டர்

Image may contain: 2 people, including Moses Asli, people standingசென்னையினை சுத்தபடுத்த முயன்றதில் அவர் பங்கு உண்டு, சாக்கடையில் இறங்கி இருக்கின்றார், குப்பை அள்ளியிருகின்றார், கிட்டதட்ட சில ஆண்டுகளாக இதனை செய்திருக்கின்றார்.

அவர் குழுவும் இக்காரியங்களை செய்திருக்கின்றது, நாமெல்லாம் கடந்து செல்லவே தயங்கும் இடங்களில் அவர் வெறுங்காலோடு பணியாற்றி இருக்கின்றார். அவரோடு மொத்த மக்களும் களம் இறங்கி இருந்தால் சென்னை மாறியிருக்கலாம்

ஆனால் தன்னால் முடிந்ததை சிலரோடு செய்தார், அந்த அடையாளம் இன்றும் இருக்கின்றது, அந்த குழுவினரோடு இயற்கை சார்ந்த பயணம் நிறைய செய்திருக்கின்றார்

அதெல்லாம் இனி யார் நினைக்க போகின்றார்கள்? அந்த பீட்டர்தான் இப்பொழுது கொலைகாரர் என்ற அளவிற்கு இறங்கிவிட்டார்கள்

சி.டி.சிதான் மலையேறும் விஷயங்களின் முன்னோடி சந்தேகமில்லை, ஆனால் சென்னையின் கொழுத்த கம்பெனிகள் எல்லாம் பணியாளர்களை டீம் பில்டிங், ரிலாக்சேஷன் இன்னபிற பெயரில் அனுப்ப ஆர்ம்பித்தபின் பல நிறுவணங்கள் வந்தன நிறைய போலி

அவை எல்லாம் சி.டி.சியுடன் தொடர்பில் இருந்தன, ஆலோசனை பெற்றன என செய்திகள் சொல்கின்றன‌

Image may contain: one or more people, people standing and outdoorஇந்த குரங்கணி சம்பவத்தில் கூட சி.டி.சியினை அணுகியிருக்கின்றாகள், இதுவரை சிக்கலை சந்திகா பீட்டர் இன்னொருவரை கைகாட்டியிருக்கலாம் என்கின்றார்கள்

அப்படி பலர் வந்து போகும் இடத்தில் சி.டி,சி கைகாட்டிய நிறுவணமும் மலை ஏற பலரை அழைத்து வந்திருக்கின்றது, அவர்கள் மாட்டிகொண்டு இறந்துவிட்டார்கள்

இப்பொழுது மொத்த சிக்கலுக்கும் சி.டி.சிதான் காரணம் என ஆளாளுக்க்கு கிளம்புகின்றார்கள்

இந்த தேசத்தை சரியாக புரிந்துகொள்ளாத பீட்டர் மகா சிக்கலில் மாட்டியிருக்கின்றார்

ஒரு விஷயம் உண்மை

நிச்சயம் பணமோ , புகழோ பீட்டரின் நோக்கம் அல்ல. அப்படி இருந்திருந்தால் அவர் நிறைய சம்பாதித்திருக்கலாம்

அவர் வேறுமாதிரி தொண்டு வாழ்க்கையில் இருந்தார், திருமணமும் செய்யவில்லை, இயற்கை பயணம் மலையேற்றம் நேரமிருந்தால் கொஞ்ச பேரை சேர்த்துகொண்டு நாற்றமெடுக்கும் ஏரியாவினை சீர்படுத்துவது என்றே அவரின் வாழ்வு சென்றுகொண்டிருந்தது

மதம் பரப்பலோ, அல்லேலூயாவா இன்னபிற குற்றசாட்டுகளும் அவர் மேல் இல்லை.

பரகாசுர கம்பெனிகள் தங்கள் ஊழியர்களின் சோர்வை போக்குகின்றோம் என பணத்தை அள்ளி வீச, அதில் பல கம்பெனிகள் டிரைனிங், மெடிடேசன் , கடலில் சர்பிங், மலைஏற்றம் என கிளம்பும் காலத்தில் மலை ஏற்றத்தில் ஈடுபாடு கொண்ட பீட்டர் அவர்களிடம் சிக்கிவிட்டார்

பண நோக்கம் கொண்ட அவர்கள் தகுந்த பாதுகாப்பின்றி செய்த மலைஏற்றத்தில் பலர் சிக்கி மாண்டாயிற்று

நிச்சயம் இதில் பீட்டரின் முழு தவறு இருக்கமுடியாது. பண நோக்கத்திற்காக அவர் செய்தார் என்றும் நிச்சயம் சொல்ல முடியாது

ஆனால் விதி அவரை மிக சரியாக கொண்டு நிறுத்தியிருக்கின்றது.

பீட்டர் தலைமறைவா? என்ற செய்திகள் வரும் நிலையில், “நாடெல்லாம் மலைஏற்றம் செய்த நாங்கள் இதனை அனுமதி பெற்றே செய்தோம் ” என சி.டி.சி வாய் திறக்க தொடங்கிவிட்டது

இனி பீட்டர் தலைவிதி என்னாகும் என்பது இனிதான் தெரியும்