ரஷ்யா உண்மையில் உலகை மிரட்டத்தான் செய்கின்றது

ரஷ்யாவில் தனக்காக உளவு பார்த்தவர்களை எல்லாம் லண்டனில் மிக நன்றாக கவனித்துகொண்டிருந்தது பிரிட்டன்

அவர்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக பரலோகம் சென்றுகொண்டே இருக்கின்றனர், உபயம் ரஷ்யா

இப்பொழுது நேற்று புட்டீனை எதிர்த்த ஒருவர், லண்டனில் இருந்து ரஷ்யாவில் குழப்பம் விளைவித்த ஒருவரும் கொல்லபட்டிருக்கின்றார்

உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளில் ஒன்றான சி.ஐ.ஏ ஸ்தானத்தில் இருக்கும் எம் ஐ 16 எனும் பிரிட்டனின் உளவு அமைப்பின் கண்காணிப்பினை மீறி அடித்து அசத்துகின்றது ரஷ்யா

பொதுவாக எல்லா உளவு அமைப்புகளும் தேவைபட்டால் கொலை செய்யும், ஆனால் இடைவெளி விட்டு செய்யும்

ரஷ்யா வாய்ப்பே கொடுக்காமல் போட்டு அடிக்கின்றது, குறிவைத்துவிட்டு மிக வேகமாக போட்டு அடிக்கின்றார்கள்

அவமானத்தில் கண் சிவந்து கையினை பிசைந்து நிற்கின்றது பிரிட்டன், எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருக்கின்றது ரஷ்யா

ராஜிவ் கொலையில் சம்பந்தபட்ட, இந்தியாவின் உளவாளியாகவும் இருந்து, அதற்கு சம்பளமும் வாங்கிகொண்டு ஆனால் பிரபாகரனுக்கு விசுவாசியாக இருந்த கிட்டு எனும் இரட்டை உளவாளி இதே லண்டனில்தான் இருந்தான்

ராஜிவ் கொலைதிட்டம் முடிவு செய்யபட்டபின், ராஜிவுக்கு நாள் குறித்தபின்னும் அவர் கொல்லபடுவதற்கு சில நாட்களுக்கு முன் டெல்லியில் புன்னகை பூக்க சந்தித்தவன் அவன்

ஏன் என்றால் அப்பொழுதுதான் புலிகள் மீது சந்தேகம் வராதாம், ராஜிவும் அந்த சண்டாளனை மதித்து உபசரித்து வீட்டு வாசல்வரை வந்து அடுத்தமுறை நான் பிரதமராகும்பொழுது உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பேன், போனமுறை பல குழப்பம் நடந்தது இனி நடக்காது என சொல்லி அனுப்பினார்

அந்த நம்பிக்கையில்தான் நள்ளிரவிலும் தனியாக தமிழகம் வந்தார் ராஜிவ், ஆனாலும் கொன்றார்கள் சண்டாளர்கள்

கொலை விசாரணையிலும் புலிகள் கொல்லவில்லை என சாதித்தான் கிட்டு, பின் உண்மை வெளிப்பட நாங்கள் அப்படிபட்ட சாகசக்காரர்கள் என லண்டனில் இருந்து சிரித்தான் அவன்.

பரமசிவன் கழுத்து பாம்பாக லண்டனின் அவ்வளவு பாதுகாப்பாக இருந்தான் கிட்டு.

( அவன் என்றல்ல பல நாட்டின் எதிரிகள் இப்படித்தான் அங்கு ஹாயாக இருந்தார்கள்)

பின் இலங்கைக்கு கப்பலில் வர அவனை நடுகடலில் கொன்றது இந்தியா

அவனை எல்லாம் லண்டனிலே தூக்கி இருக்க வேண்டும். இந்தியா செய்யாததை, ஏன் ஆனானபட்ட இஸ்ரேலே லண்டனில் செய்ய அஞ்சிய இம்மாதிரி காரியத்தை மிக அசால்ட்டாக செய்துவிட்டு என்ன வந்தாலும் சந்திக்க தயார் என நிற்கும் ரஷ்யா உண்மையில் உலகை மிரட்டத்தான் செய்கின்றது

இனி எந்த நாடாவது எளிதில் ரஷ்யாவில் குழப்பம் செய்பவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும்?

பிரிட்டனின் எம் ஐ16க்கே இந்நிலை என்றால் மற்ற நாடுகள் எல்லாம் ரஷ்யாவிற்கு எம்மாத்திரம்?