முகநூல் நண்பர் பெரியசாமி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

முகநூலில் எத்தனையோ நண்பர்கள் கிடைத்தார்கள், அவர்களில் ஒருவர் Periya Samy

நன்கு படித்தவர், வங்கியில் பெரும் பதவியில் இருப்பவர். எமது ரசனையும் அவர் ரசனையும் பல இடங்களில் ஒன்றாக இருந்தது

அது குஷ்பு ரசிகர் மன்றத்தில் இருவரையும் ஒரே புள்ளியில் கட்டி போட்டது. வங்கியில் அவர் பொருளாளராக இருப்பதால் இப்போது சங்கத்தின் பொருளாளர் பதவியும் அவருக்கே

மிக எளிமையானவர், குழந்தை மனதுக்காரர். துளியும் தற்பெருமையோ , பதவி பந்தாவோ இல்லாத மிக சிலரில் ஒருவர்

இன்று அவருக்கு பிறந்த நாள்.

வாழ்வின் சில நிமிடங்கள் மறக்க முடியாதது, அப்படி கடந்த ஜனவரியில் சென்னையில் இருந்து நெல்லை செல்லும்பொழுது, திருச்சியில் ரயில் நிற்கும் அந்த இரு நிமிடங்களில் எனக்காக காத்து நின்றார்

அப்பொழுது மணி இரவு 1.30.

அந்த நள்ளிரவிலும் அதுவும் இரு நிமிடத்திலும் என்னை சந்தித்துவிட வேண்டும் என அவர் காத்திருந்தது அவரின் வெள்ளை மனதை காட்டிற்று

ஒரு நிமிடம் சந்தித்தாலும் அவரின் களங்கமில்லா அந்த சிரிப்பு மறக்கவே முடியாதது, அவருக்கு அப்படி என்ன செய்துவிட்டோம் என மனம் கேட்ட கேள்வியில் அதன் பின் தூங்கவே இல்லை

அருமை நண்பரும், குஷ்பு சங்கத்து பொருளாளருமான அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சங்கம் தலைவி சார்பாக தெரிவிக்கின்றது

நாம் வணங்கும் தெய்வங்கள் எல்லாம் அவரை ஆசீர்வதிக்கட்டும். திருச்சி மலைகோட்டை போல அவர் நிலைத்து வாழட்டும்