இந்து கிறிஸ்தவ சர்ச்சைகள்

No automatic alt text available.

ஏதோ இந்து கிறிஸ்தவ சர்ச்சைகள் இன்றுதான் தமிழகத்தில் முளைக்க தொடங்கி இருப்பது போலவும், அதற்கு முன்பு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மிக அமைதியாக இருந்தது போலவும் பலர் பேசிகொண்டிருக்கின்றார்கள்

கிறிஸ்தவம் இந்தியாவில் 1900 ஆண்டுகளுக்கு முன்பே அரேபிய கேரள தொடர்பால் கேரளாவிற்கு வந்தது ஆனால் பெரிதாக பரவவில்லை. காரணம் வந்தது சீரிய கத்தோலிக்க சபை

அதன் பின் 1500களில் வாஸ்கோடகாமா வந்தபொழுது கிறிஸ்தவம் வந்தது, போர்த்துகீசியரின் கோவாவில் அது பரவிற்று, கேரளாவிலும் பரவிற்று ஆனால் வலுகட்டாயமாக அல்ல. கடலோரங்களில் தங்களோடு இணைந்தவர்களை போர்த்துகீசியர் ஏற்றனர்

நாயக்க மன்னரிடம் கடற்படை இல்லாததால் கடல்கொள்ளையரை அடக்க போர்த்துகீசியபடை வந்து தமிழக கடற்கரையோரங்கள் கிறிஸ்தவமாயின, இதுவும் ரோமை கத்தோலிக்கம் , இதுவரை சிக்கல் இல்லை, வேளாங்கண்ணி போன்ற தலங்கள் வந்தாலும் மோதல் இல்லை.

சிக்கல் எங்கு தொடங்கிற்று? மார்ட்டின் லுத்தர் என்பவன் போப்பை எதிர்த்து தனி சபை தொடங்கியபொழுது ஐரோப்பாவில் இந்த அழிச்சாட்டிய கிறிஸ்தவ சபைகள் தோன்ற ஆரம்பித்தன‌

பெரியாரின் கழகம் இன்று தினகரன் வரை வருகின்றதல்லாவ அப்படி நிறைய பிரிவினை நிறைய சபைகள்.

பிரிட்டானியர் வந்தபொழுது அவர்கள் பின்னால் பல மிஷினரிகள் வந்தன , அவைதான் இந்த சர்சையின் தொடக்கம், இவர்கள் காலத்தில்தான் அழிச்சாட்டியம் தோன்றியது

பைபிளை தமிழுக்கு கொண்டுவந்தார்கள், ஏகபட்ட தமிழ் கிறிஸ்தவ பாடல்களும் வந்தன இந்து தேச மாத சிரோமணிகளை விந்தை ஒளிக்குள் வரவழைப்போம் என்ற பாடல் எல்லாம் அப்பொழுது வந்ததுதான்

ஆனால் இந்த 18ம் நூற்றாண்டில் இந்துக்கள் விழித்தனர், இந்துமதம் அப்படித்த்தான். அது உறங்குவது போல் தெரியும் அழிவது போல் பாசாங்குகாட்டும் ஆனால் விழிக்க வேண்டிய நேரத்தில் விஸ்வரூபமெடுக்கும்

இது ஆதிசங்கரர் காலம் அதற்கு முன்பிருந்தே அப்படித்தான்

புத்தம், சமணம், இஸ்லாம் மதங்களோடு மல்லுகட்டிய இந்துமதம் கிறிஸ்துவத்தை எதிர்க்க தொடங்கியது, அதாவது அவர்கள் செய்த அழிச்சாட்டிய இம்சைகளை கண்டு சீற தொடங்கியது . அவர்கள் கல்வி நிலையங்களை, சேவைகளை எந்த இந்துவும் தடுக்கவில்லை

மாறாக இந்துமத மக்களை கவர்ந்தபொழுதுதான் பொங்கினர்,

இந்துமதத்தில் குறை இருந்தால் நாங்களே சரிசெய்வோம் என செய்தும் காட்டினர்

ராஜாராம் மோகன்ராய் என்ற இந்துதான் சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க பாடுபட்டு வெற்றி பெற்றார்

தெற்கே தாழ்த்தபட்டவருக்கு மேலாடை அணிய உரிமை இல்லா நிலையில் பலர் கிறிஸ்தவராக மாறியபொழுது அய்யா வைகுண்டர் எனும் இந்துவே போராடினார், அவரின் உருவாக்கமான நாராயணகுரு போன்ற இந்துக்கள் சீர்திருத்தவாதிகள் ஆயினர்

கிறிஸ்தவர்கள் பசியாற்றுவர் என்றபொழுது ஏன் எங்களால் ஆற்றமுடியாதா? என வள்ளலார் போன்றவர்கள் தர்ம சாலைகளை தொடங்கினர்

விவேகானந்தர் போன்றவர்கள் ஞானமிக்க வாதத்தால் மேற்கத்திய கிறிஸ்தவர்களையே வென்றனர்.

இந்து ஆதீனங்கள் கல்வி சாலை தொடங்கின, கிறிஸ்தவத்திற்கு எல்லா வழியிலும் இந்துக்கள் பதிலடியினை 18ம் நூற்றாண்டிலே கொடுத்தனர்

அதன் பின் மோதல் முற்றிற்று, கிறிஸ்தவ பத்திரிகைகள் இந்துக்களை தாக்க, இந்துக்களும் பத்திரிகை நடத்தி பதிலடி கொடுத்தனர்

சிவனா சாத்தானா? என இவர்கள் எழுத இயேசு இருந்தாரா? என அவர்கள் எழுத நிலமை படு சிக்கலுக்கெல்லாம் சென்றது

இதில் நிவேதிதா போன்ற சில வெள்ளையர்கள் இந்துமதம் சேர, தியோபிக்கல் சொசைட்டி எல்லாம் உருவாக இந்துக்கள் குரல் ஓங்கியது. ஆனால் ஆள்வது பிரிட்டானியராக இருந்த ஒரே பலமே கிறிஸ்தவர்க்கு இருந்தது

இதில் இந்துக்களுக்கு ஆதரவாக யாழ்பாண இந்துக்களும் வந்தனர். ஆம் அவர்களுக்கு அங்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் எதிரி தமிழக இந்துக்களுக்கு அழிச்சாட்டிய கிறிஸ்தவர்கள் எதிரி, இதனால் இரு இந்துக்களும் ஒன்று சேர்ந்தனர்.

ஈழத்து “தெய்வ திருமகன்” ஆறுமுக‌ நாவலரின் சொற்பொழிவுகள் எல்லாம் இங்கு அணலை கக்கி இருகின்றன‌

இந்த 18ம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்து கிறிஸ்தவ மோதல் மகா உச்சத்திலே இருந்திருக்கின்றது, பெரும் சண்டைகள் எல்லாம் நடந்திருக்கின்றன‌

இப்படியாக 1925 வரை இரு தரப்பும் முறுக்கி கொண்டே இருந்திருக்கின்றன, சில பல கலவரங்களும் நடந்திருக்கின்றன‌

ஆனால் 1930க்கு பின் தமிழக இந்துமதம் பெரியார் எனும் புயலை சந்திக்க நேர்ந்தது, கடவுள் இல்லை என அவர் முழங்கியதும் இந்துக்களுக்கும் பெரியாருக்குமான யுத்தம் தொடங்கிற்று

இது கிறிஸ்தவர்களுக்கு நிம்மதியினை கொடுத்தது. டாப் கியரில் எகிறினார்கள். பெரியார் பகுத்தறிவு பேசிகொண்டு கலகம் செய்தது இவர்களுக்கு பெரும் வாய்ப்பானது

கவனியுங்கள் இன்றும் ஏராளமான கிறிஸ்தவ ஆலயங்கள் 100 ஆண்டுகளுக்கு முற்பட்டதாய் இருக்காது, 200 , 300 ஆண்டுகளை கடந்த கிறிஸ்தவ‌ ஆலயங்கள் மிகச்சிலவே

கல்வி நிறுவணங்களும் அவ்வாறே.

இந்து- பெரியார் மோதல் நடக்க நடக்க இப்பக்கம் சத்தமின்றி கிறிஸ்தவ ஆலயம், அல்லேலூயா கோஷ்டி எல்லாம் பெருகின. அதன் பின் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தபின் இன்னும் வசதி

இப்படி திராவிட எழுச்ச்சியில்தான் இந்து கிறிஸ்தவ மோதல் தணிந்திருந்தது

இப்பொழுது திராவிட கட்சிகளுக்கு சோதனையான காலம், கலைஞர் ஓய்ந்துவிட்டார், ஆட்சியில் இருக்கும் அதிமுகவினை தனக்கு ஏற்ற குட்டிசாத்தானாக மோடி கும்பல் அடக்கி உருட்டி வைத்திருக்கின்றது

இனி என்னாகும்? பழையபடி திராவிட ஆட்சி வருமா என்பதெல்லாம் காலம் தீர்மானிக்கும்

ஆனால் இந்த வீழ்ச்சியில் அழிச்சாட்டிய கிறிஸ்தவம் பரவ தொடங்கிய அந்த 17 , 18ம் நூற்றாண்டில் இங்கு இந்துமதம் எப்படி எதிர்ப்பினை கொடுத்ததோ அப்படி மறுபடியும் கொடுக்க தொடங்கி இருக்கின்றது

இதில் ஒரு நாளும் கத்தோலிக்கருக்கும் இந்துக்களுக்கும் அவ்வளவாக சிக்கல் வராது, வந்திருந்தால் அது அரசியல் விளையாட்டு

சில வெளிநாட்டு உளவு நிறுவணங்களும், உள்ளூர் அரசியலும் நுழைந்துவிட்ட கத்தோலிக்க நிறுவணங்களாலே சிக்கலே அன்றி, நிச்சயம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் அல்ல.

ஆனால் பெரும்பாலும் சிக்கல் வருவது அழிச்சாட்டிய கும்பல்களால், ஒரு மாதிரியான மூளை சலவை செய்யபட்ட கும்பல் அது. ஒருவித தாலிபானிசம், சியோனிசம் போன்ற மூர்க்கமான கூட்டம் அது, என்ன சொன்னாலும் திருந்தாது

இவர்கள்தான் சிக்கலுக்கு அன்றும் காரணம் இன்றும் காரணம்

முன்பே சொன்னதுதான், இந்துமதம் ஒரு காலமும் அழியாது மாறாக ஓரளவு சகித்து செல்லும், முழுக்க‌ முடியாத பட்சத்தில் வீறு கொண்டு எழும். இது வரலாறு முழுக்க காண கிடக்கின்றது

அப்படி வெள்ளையன் காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு கடிவாளம் போட பொங்கிய இந்துமதம், பின் திராவிட குரலால் திசைமாறிய இந்துமதம் இப்பொழுது திராவிட குரல் அடங்க தொடங்கியதும் மறுபடியும் முன்பு விட்டிருந்த சில விஷயங்களை தொடர்கின்றது

நடக்கும் சம்பவங்கள் 200 ஆண்டுகால தொடர்ச்சியே அன்றி புதிதாக அல்ல, அதுவும் மோடி வந்துவிட்டார் பாஜக வந்துவிட்டது, எச்.ராசா வந்துவிட்டார் என்பதால் அல்லவே அல்ல‌

மோடியின் முப்பாட்டனும், பாஜகவின் முப்பாடனுமான இந்து மகாசபை தோன்றுவதற்கு முன்பே நடந்த சர்சையின் தொடர்ச்சி இது.