தாமிரபரணி நம்பியாறு இணைப்பு திட்டம்
தாமிர பரணியினையும் நம்பியாற்றையும் 100 கோடி செலவழித்து இணைக்க போகின்றார்களாம்
எங்கே? எப்படி இணைக்க போகின்றார்கள் என தெரியாது
தாமிரபரணி வற்றா நதி, மழை இல்லை என்றால் மேலப்பாளையம் சாக்கடையாவது ஓடிகொண்டிருக்கும். நல்ல நதிதான் சந்தேகமில்லை
ஆனால் அது திருவைகுண்டத்தை தாண்டாது, மழைகாலம் மட்டுமே தாண்டும்
மற்றபடி அம்பை முதல் திருவைகுண்டம் வரை அதன் பாசன பரப்பு ஏராளம், நஞ்சையும், வாழையும் அதனால் அப்படி விளைகின்றன
இதில் இவர்கள் தாமிரபரணியினை நம்பியாரோடு இணைப்பார்களாம், தாமிரபரணி விவசாயிகள் எல்லாம் விடுவார்களா?
நாங்கள் திருவைகுண்டம் தாண்டி இணைப்போம் என்றால் அங்கு நீரே வராது
பத்தமடை பக்கம் திருப்புவோம் என்றால் திருவைகுண்டம் விவசாயிகள் விடமாட்டார்கள்
மழைகாலத்தில் விடுவோம் என்றால், மழைகாலத்தில் நம்பியாறே பொங்கி கடலில் வழியும்பொழுது தாமிரபரணி எதற்கு?
இதனிடையில் மணிமுத்தாறு கால்வாயும் வரும்
இதெல்லாம் சரிவரா திட்டங்கள் நம்பியாற்றின் குறுக்கே மிகபெரும் அணை கட்டினால் நல்லது, அதனை செய்யவில்லை
மேற்கே பாயும் நதிகளை திருப்பி நம்பியாற்றில் கலக்க செய்தால் பெரும் சிக்கல் தீர்ந்தது, அதனை செய்யலாம் அல்லவா? செய்யமாட்டார்கள்
ஏற்கனவே தாமரபரணியிலிருந்து ஒரு கால்வாய் தெற்கு நோக்கி வெட்டபட்டது, ஏன் என்றதற்கு எல்லாம் வளமாக்குவோம் என்றார்கள், விஷயம் என்னவென்றால் கூடன்குளம் அணுவுலைக்கும் ஊழியர் குடியிருப்புக்கும் பேச்சிபாறை நீரை கொண்டு செல்வதாக இருந்தது, குமரி பொங்கியதில் பின் வாங்கினார்கள்
அதன் பின் தாமிரபரணி நீரை கொண்டுபோவதாக செய்தி வந்ததும் எதிர்ப்பு வந்தது
இப்பொழுது கூடன்குளத்தில் 3ம், 4ம் அணுவுலை கட்டபடுவதால் தாமிரபரணியினை திசைமாற்ற வாய்பிருக்கலாம், டெல்லி சொன்னால் தட்டுவது யார்?
இந்த விவகாரம் இனி பரபரப்பாகலாம், தாமிரபரணி நம்பியாற்றில் பாய்வதெல்லாம் சாத்தியமில்லை, அதன் பாசன பரப்பு மிக அதிகம்
மேற்கே பாயும் நதிகளை கிழக்கே திருப்பாமல் ராதாபுரம் பகுதி செழிக்க வழி இல்லை