தென்னகத்தில் ஒலிக்கிறது மாநில சுயாட்சி குரல்..
ஆந்திர அரசும் பாஜகவிற்கு எதிராக பொங்க ஆரம்பித்தாயிற்று, சந்திரபாபு நாயுடு சீற ஆரம்பித்துவிட்டார்
ஆக தென்னகத்தில் கேரளத்தை அடுத்து ஆந்திராவிலும் பாஜக அரசுக்கு எதிர்ப்பு வலுகின்றது
என்ன நடந்தது?
ஆந்திராவினை இரண்டாக பிரிக்கவேண்டும் என்பது 1957ல் இருந்து வந்த சிக்கல், ஆனால் ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் என்ற கொள்கையில் இருந்த மத்திய அரசு பெரிதாக கண்டுகொள்ளவில்லை
இந்த ஒரேமொழி ஒரே நாடு, மாநிலம் என்பதெல்லாம் சுத்தமாக சரிவராது. ஒரே மொழியாயினும் பிரச்சினைகள் வெடிக்கும், அது இங்கிலாந்து வட அயர்லாந்து முதல் தெலுங்கானா ஆந்திரா , வடகொரியா தென்கொரியா வரை காணலாம்
ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வரும்வரை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ராமசந்திரனை தொடர்ந்து ராமராவ் ஆட்சிக்கு வந்தபொழுது, இனி காங்கிரசுக்கு எதிர்காலமில்லை என தெரிந்தபொழுது தெலுங்கானா குரல் ஓங்கி ஒலித்தது
ஆனால் ராமராவிற்கு பின்னரான காலம் காங்கிரஸ் எழும் என காத்திருந்தார்கள், ஆனால் சந்திரபாபு நாயுடு அசத்தினார்
தெலுங்கு தேச கட்சி ராமராவின் கடைசி மனைவி சிவபார்வதி, அவருக்கு பின் அவர் வீட்டு வேலைக்காரர்களிடம் சிக்கும் ஆபத்து இருந்தது,
ஆனால் அது என்ன தமிழ்நாடா? தியாக தலைவி சிவபார்வதி என கிளம்ப?
நாயுடு மிக சரியாக கட்சியினை கைபற்றினார், அத்தோடு அங்கு நடிகர்கள் அரசியலுக்கு வருவதும் நின்றது.
மிகபெரும் நட்சத்திர அடையாளமான
சிரஞ்சிவீயினை இறக்கிபார்த்தும் தெலுங்கர்கள் அசையவில்லை
காங்கிரசின் ஆறுதலாக இருந்த ராஜசேகர ரெட்டியும் இறந்தார்
இந்நிலையில் இனி ஆந்திராவில் இருந்து சில எம்பிக்கள் காங்கிரசுக்கு வருவார்கள் என்றால் தெலுங்கான உதித்தால்தான் உண்டு என்ற நிலையில் ஆந்திரா உடைக்கபட்டது
பெரும் நகரங்கள் எல்லாம் தெலுங்காணாவிற்கு சென்றது, ஐதரபாத்தும் சென்றாயிற்று
1957ல் மொழிவாரி மாநிலம் பிரிக்கபட்டபொழுது சென்னை தலைநகராக இருக்க வேண்டும் என போராடி தோற்ற ஆந்திரம், அதன்பின் ஐதரபாத்தினை வளர்த்து அதையும் தெலுங்காணாவிடம் விட்டாயிற்று
உண்மையில் காங்கிரஸ் செய்தது அநீதி, விசாகபட்டினம் தவிர இப்போது ஆந்திராவில் சொல்லும்படி ஒரு நகரமில்லை
ஆனால் இனி உருவாகும் நகருக்கும், ஆந்திரா சீர்படும்வரை சிறப்பு அந்தஸ்து தருவதாக உறுதி சொன்னார்கள், வேறு வழியின்றி நாயுடுவும் நம்பினார்
நாயுடு செய்த தவறென்ன? காங்கிரஸை எதித்தது சில நேரங்களில் பாஜக, மூன்றாம் அணி என ஆதரித்தது.
ஆனால் ஆந்திராவினை அட்டகாசமாக வளர்த்தார் என்பது உண்மை, அவரின் பல திட்டங்கள் மாபெரும் வெற்றி
இதற்கு கிடைத்த பதிலடி ஆந்திர உடைப்பு, மீதி ஆந்திராவினை கதற வைத்தது.
சந்திரபாபு அசரவில்லை, அமராவதி எனும் நகரை உருவாக்க நினைத்தார், உலக முதலீடுகள் எல்லாம் கவர, இன்னும் பல திட்டங்களை உருவாக்க அவருக்கு சிறப்பு அந்தஸ்து தேவைபட்டது
காங்கிரஸ் தருவதாக சொல்லி ஏமாற்றியது, இப்பொழுது பாஜகவும் ஏமாற்றுகின்றது
எங்களுக்கு அநீதி இழைக்கபட்டது, அந்த அநீதியினை துடைக்க சிறப்பு அந்தஸ்து வேண்டும் அதுவும் இல்லாவிட்டால் எப்படி? என சீறுகின்றார் பாபு
இதுதான் இந்நாட்டின் நிலை, எந்த மாநிலம் எல்லாம் டெல்லியினை மீறி தங்களை வளர்க்க நினைக்கின்றதோ , எந்த மாநிலத்தில் தேசிய கட்சி அடிவாங்கிற்றோ அங்கெல்லாம் செக் வைப்பார்கள்
நிதி தர மறுப்பார்கள். தொழில்வளங்களுக்கு முட்டுகட்டை இடுவார்கள்,ஒரு மாதிரி ஒதுக்குவார்கள். மாநில அரசு அவர்கள் காலில்விழவேண்டும் என்ற அளவிற்கு செல்வார்கள்
இச்சிக்கலை 1967லே கண்டது தமிழகம், 1969ல் இச்சிக்கல் உச்சிக்கு சென்றபொழுதுதான் தமிழகம் மதுகடைகளை திறந்துவிட்டு பின் மூடியது
இன்று சந்திரபாபு நாயுடு கேட்கும் சிறப்பு அந்தஸ்தின் இன்னொரு பெயர் என்ன தெரியுமா?
“மாநில சுயாட்சி”
இதனை 1967லே வலியுறுத்திய கட்சிதான் திமுக, அண்ணாவும் கலைஞரும் அதனை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லிகொண்டே இருந்தார்கள்
இன்னும் பாருங்கள் பலர் வருவார்கள்
(தமிழக பட்ஜெட்டிலும் மத்திய அரசின் ஆட்டம் தெரிந்தது, அவர்கள் அழுவதும் தெரிந்தது.
“எதிர்க்க வலுவில்லாதவர்கள் என்ன செய்வார்கள் பாவம்” என ராமசந்திரன் ஒரு படத்தில் சொன்னதுதான்)
பிரணாயி விஜயன், சந்திரபாபு நாயுடு, கன்னடத்தில் பெரும்கும் இந்தி எதிர்ப்பு என பலர் இணைந்து இனி விரைவில் சொல்வார்கள்.
நாம் இன்று செய்யும் எதிர்ப்புகளையும், கோரிக்கைகளையும், போராட்டங்களையும் அன்றே மிக நேர்த்தியான தொலை நோக்குடன் செய்திருகின்றது திமுக என உறுதியாக சொல்வார்கள்.
திராவிடத்தால் வீழ்ந்தோம் என சொன்னவன் எவன்?
திராவிடம் அன்றி வாழ்வில்லை என தென்னகம் பொங்கி எழுவதை விரைவில் இந்தியா காணும், அதற்கு முன்னோடி திமுக என வரலாறு எழுதும்
அதற்குள்ளாவது திராவிடத்தால் வீழ்ந்தோம் என சொல்லிகொண்டிருப்பவன் எல்லாம் திருந்தட்டும்