திராவிட நாடு அமையும் : ஸ்டாலின் நம்பிகை

Image may contain: 1 person, standing and outdoorதிராவிட நாடு அமையும் : ஸ்டாலின் நம்பிகை

பெரியார் திராவிட நாடு கேட்டார் , கிடைக்கவில்லை. “திண்ணையில் படுத்தாவது திராவிட நாடு அடைவோம்” என அண்ணா கிளம்பினார்

திண்ணைதான் கிடைத்தது திராவிட நாடு கிடைக்கவில்லை, காரணம் தமிழகம் என்றுமே பிரிவினைக்கு ஆதரவான மாநிலம் அல்ல‌

இதனை நிரம்ப யோசித்த அண்ணா , காலம்பார்த்தார் சீனப்போர் முடிந்த நிலையில் நேரு இனி பிரிவினைவாதம் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்க, திமுக தடைசெய்யும் அளவிற்கு நிலமை சிக்கலானது

அண்ணா தனக்கே உரிய பாணியில் சாதுர்யமாக சொன்னார் “திராவிட நாடு கோரிக்கையினை நாங்கள் கைவிடுகின்றோம், ஆனால் என்ன நோக்கத்திற்காக திராவிட நாடு கேட்டோமோ அந்த காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என சொல்லி தேசிய ஜோதியில் கலந்தார்

யாரும் திராவிட நாடு அடைய வேண்டிய காரணங்கள் அப்படியே இருக்க, ஏன் போராட்டத்தை கைவிடுகின்றீர்கள் என கேட்கவில்லை, அண்ணாவின் நல்ல நேரம் அது.

உண்மையில் தனிநாடு கோரிக்கையினை கைவிட்டபின்புதான் அண்ணாவிற்கு வெற்றி கிடைக்க தொடங்கியது, பின்பு அது அவரை ஆட்சியிலும் அமர்த்தியது

தனிநாடு கேட்ட அண்ணா அதன் பின் மாநில சுயாட்சி என ராகத்தை மாற்றினார், அத்தோடு கொஞ்ச நாளில் இறந்தார்

கலைஞர் முதல்வரான காலத்தில் மாநிலம் மத்திய அரசால் சந்திக்கும் சிக்கலுக்கு தீர்வு என அறிக்கை கொடுக்க நீதிபதி ராஜமாணிக்கம் என்பவரை கொண்டு கமிஷன் அமைத்தார்ர்

அந்த கமிஷன் மத்திய அரசு மாநில அரசுக்கிடையில் கவுன்சில் வேண்டும், திட்ட கமிஷன் தனியாக இயங்க வேண்டும், வரிகள் வசூலிப்பதில் சீர்திருத்தம் வேண்டும்
ஆளுநர் தேவையில்லை, மாநில அரசை மிரட்டும் 356ம் பிரிவு ரத்து செய்யபடவேண்டும் என பல பரிந்துரைகளை கொடுத்தது

ஆனால் ஏனோ கலைஞர் அதில் வேகம் காட்டவில்லை

மாறாக பாருக் அப்துல்லா, ஜோதிபாசு, ஹெக்டே, பாதல் போன்றவர்கள் மாநில சுயாட்சி குரலை போர்குரலாக்கி சில வெற்றியும் பெற்றார்கள்

இப்பொழுது அதே மாநில உரிமைகள் சிக்கல் வருகின்றது, சந்திரபாபு நாயுடு சீறுவது அதற்காகத்தான்

இந்நிலையில் அந்த ராஜமாணிக்கம் கமிஷனின் முடிவுகளை, அதாவது கலைஞர் காலத்தில் யோசனையில் இருந்த முடிவுகளை பரிசீலிக்க சொல்லலாம்

மாநில சுயாட்சி வேண்டும் என போர்குரல் கொடுக்கலாம்

அதனை எல்லாம் விட்டுவிட்டு திராவிட நாடு அடைவோம் என கிளம்புவது அண்ணாவின் கொள்கையினை மீறுவதும், காமெடியும், கோபமும் வர வைக்கும் விஷயமாகும்

திமுக ஒரு நாளும் பிரிவினை கோராது என சொல்லிவிட்டுத்தான் தமிழக ஆட்சிக்கு வந்தவர்கள் இப்பொழுது திராவிட நாடு காண்போம் என்பதெல்லாம் கண்டிக்கதக்கது

அப்படியும் கம்யூனிஸ்டுகள் திராவிட கோரிகைக்கு வரமாட்டார்கள், சந்திரபாபு நாயுடு பிரிவினைவாதி அல்ல. இதில் எங்கிருந்து திராவிட நாடு அமையும்? அமைந்தாலும் 3 நாடுகளாகத்தான் அமையும்

இதில் இவர் மட்டும் எப்படித்தான் திராவிட நாடு காண்பாரோ தெரியவில்லை

மிக மூத்த கட்சியின் தலைவர் கொஞ்சமும் பொறுப்பின்றி இப்படி பேசுவது கண்டிக்கதக்கது

முக ஸ்டாலினின் பொறுபற்ற பேச்சினை வன்மையாக கண்டிக்கின்றோம், மாநில சுயாட்சியினை ஆதரிக்கின்றோம்

இப்பொழுது நடைமுறைபடுத்த வேண்டியது ராஜமாணிக்கம் கமிஷனின் பரிந்துரையே தவிர, 1940களில் பேசிகொண்டிருந்த பிரிவினைவாதம் அல்ல‌

யாரோ ஸ்டாலினுக்கு ஆலோசனை கொடுக்கின்றோம் என்ற பெயரில் மண் அள்ளி தலையில் போடுகின்றார்கள்

ஆட்சி நெருக்கடி, மிசா என எத்தனையோ எதிர்ப்புகளை கண்ட கலைஞர் இம்மாதிரி ஒரு இடத்திலும் உளறவில்லை, காரணம் திமுக கடந்துவந்த நெருப்பாறு அவருக்கு தெரியும்

1960களில் இருந்த திமுகவின் பிரிவினைவாத இமேஜை, 1991 ராஜிவ் கொலையில் விழுந்த பிரிவினைவாத பழியினை எல்லாம் 2009ல் மகா அமைதியாய் இருந்து கடந்து, திமுக பிரிவினை கட்சி அல்ல என நிரூபித்தவர்

ஆனால் இந்த ஸ்டாலின் தலைகணத்தில் தடுமாறுகின்றாரா? இல்லை யாரோ சொன்ன குருட்டு ஐடியாவில் உளறுகின்றாரா என்பது தெரியவில்லை

பிரிவினைவாதம் திமுக எனும் கட்சியினை குப்புற தள்ளும் என்பதில் துளியும் சந்தேகமில்லை

ஒரு இந்திய தமிழனாக முக ஸ்டாலினின் இந்த பிரிவினை பேட்டியினை வன்மையாக கண்டிக்கின்றோம்

வரலாற்றில் இருந்து ஸ்டாலின் பாடம் படிப்பது நல்லது, இல்லாவிட்டால் காலம் அவருக்கு தக்க பாடம் கற்று கொடுக்கும்