பெரியார் சிலை இடிப்பை விட மகா அவமானம் இது
ஈராக்கில் மாவீரன் சதாம் வாழ்ந்த அரண்மனையினை பல்கலைகழகம் ஆக்க போகின்றார்களாம்
பிடல் காஸ்ட்ரோ, சிங்கப்பூரின் லீகுவான் யூ, சீனாவின் டெங் ஜியோ பிங்கிற்கு எல்லாம் சிலையும் கிடையாது, நினைவு மண்டபமும் கிடையாது. இவ்வளவிற்கும் நாட்டை முன்னுக்கு கொண்டுவந்த மிக சிறந்த முன்னோடிகள் அவர்கள்
இங்கே ஜெயலலிதா வீடு நினைவு இல்லமாம், அவருக்கு மணிமண்டபம் வேறு பல கோடி செலவில் கட்டுவார்களாம்
பெரியார், அண்ணா வழியில் நடந்தவர் ஜெயலலிதா அதனால் அம்மா எனும் பெயரில் பெரியார் அண்ணா திராவிடம் என எல்லா கொள்கையும் அடக்கம் : தினகரன்
அண்ணாவும் பெரியாரும் சொத்து குவிப்பு வழக்கிலா சிறை கண்டார்கள்?
கும்பகோணம் மகாமகத்தில் பலரை மிதித்து பெரியாரும் அண்ணாவும் கொன்றார்களா? யாகம் நடத்தினார்களா? மன்னார்குடி ராஜகோபால்சாமி கோவிலில் யாகம் நடத்தி மேடையில் இருந்தார்களா?
அண்ணாவும் பெரியாரும் கடற்கரை, மலை என மாட மாளிகை கட்டினார்களா?
ராமர்கோவில் கட்ட முழு ஆதரவு என பெரியாரும் அண்ணாவும் என்றைக்கு சொன்னார்கள் மிஸ்டர் தினகரன்?
உண்மையான பெரியாரிஸ்டுகள் இதற்குத்தான் பொங்க வேண்டும், ஆனால் அவர்கள் பெரியார் சிலைக்குத்தான் பொங்குவார்கள்
பெரியார் சிலை இடிப்பை விட மகா அவமானம் இது