ராமனுக்கு ஆலயம்

தமிழ் இலக்கியத்தின் தனிபெரும் அடையாளம் கம்பராமாயணம்

கம்பன் எனும் தமிழ்கவிஞனே ராமனின் புகழை பாடித்தான் அழியா புகழ்பெற்றிருக்கின்றான்

ராமரை எல்லாம் கொஞ்சகாலம் தமிழகம் மறக்கடிக்க முயன்றிருக்கலாம் , முற்றிலுமாக மறக்கடிக்கலாம் என்றால் நிச்சயம் முடியாது.

ராமனும் கண்ணனும் இந்நாட்டின் மாபெரும் அடையாளங்கள். அதனை எல்லாம் ஒழித்துவிட யாராலும் முடியாது. புத்தமும், சமணமும், ஆப்கானிய மன்னர்களும் செய்யமுடியாததை திராவிட கருஞ்சட்டைகளும் செய்துவிட முடியாது.

இதனை புரிந்து அரசியல் கட்சிகள் பேசுவது நல்லது, நாத்திகவாத காலமெல்லாம் கடந்துவிட்டது, அந்த மண்குதிரை கரைந்துவிட்டது.

ராமனுக்கு ஆலயம் கூடாது அல்ல என்பது சரியல்ல, ஆனால் மசூதி இருந்த இடத்திலே கட்டுவோம் என பிடிவாதம் பிடிப்பதுதான் தவறு

அது அந்த‌ ராமனுக்கே பிடித்தமானது அல்ல‌ ,

நாடு அமைதிபட தன் அரசவாழ்வையே துறந்து காட்டுக்கு சென்ற மகான் அவர். நாட்டின் நல் அமைதியே அவருக்கு முக்கியம்,

ராமராஜ்யம் என்பது அதுதான்.

அந்த மசூதியினை கட்டி கொடுத்துவிட்டு வேறு எங்கேனும் அயோத்தியில் ராமனுக்கு ஆலயம் எழுப்புவதே இந்நாட்டில் அமைதி செழித்திருக்க ஒரே வழி.