பதற்றத்தின் உச்சியில் இருக்கின்றார் ஸ்டாலின்
தனது ட்விட்டர் பதிவு போலவே போலியாக உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையரிடம் ஸ்டாலின் மனு
பதற்றத்தின் உச்சியில் இருக்கின்றார் ஸ்டாலின்
இம்மாதிரி ஆயிரம் விஷயங்கள் வரும், செய்யத்தான் செய்வார்கள். இதனை அறிக்கையில் கண்டிக்கலாம் மேடைகளில் சொல்லலாம்
ஒரு பெரும் கட்சியின் தலைவர் இப்படி கமிஷனரிடம் சென்று நிற்பது யாரும் ரசிக்க கூடிய காட்சி அல்ல. கலைஞர் மீது சொல்லாத அவதூறா அவரை தூற்றாத தூற்றலா?
ஒரு இடத்திலாவது அவர் இப்படி நிற்க கண்டோமா?
பொதுவாழ்க்கை என்பது பல விமர்சனங்களுக்கும், ஏராளமான கும்மாங்குத்துகளுக்கும் பதிலளிக்க வேண்டிய இடம், சில விஷயம் அமைதியாகவும், சில விஷயங்களை பொறுமையாகவும் கொண்டு செல்ல வேண்டும்
இப்படி எல்லாம் கிளம்புவது மூத்த அரசியல்வாதிக்கு அழகல்ல
உண்மையில் இப்பொழுது பொய்செய்திகளில் பாதிப்படைவது தமிழிசைதான் ஆனால் அம்மணி கமிஷர் முன் கண்ணை கசக்கி கண்டீர்களா?
அவருக்கு இருக்கும் அரசியல் அனுபவம் ஸ்டாலினிடம் இல்லை
இம்மாதிரி புகார் கொடுப்பது, அவதூறு வழக்கு என் சீறுவது எல்லாம் ஜெயா பாணி. ஸ்டாலின் ஜெயலலிதாவாக மாறி வருகின்றார் என்பது மட்டும் புரிகின்றது
முன்பு காமராஜர் இருந்த வாடகை வீட்டை அவரின் சொந்த வீடு என பேனர் வைத்து பிரச்சாரம் செய்தனர் திமுகவினர்
காமராஜர் கண்ணீர் விட்டு அழுதாரே தவிர கமிஷனரிடம் ஓடவில்லை
அக்காட்சிகள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன
அப்பொழுதே காலம் அப்படி இருந்தது என்றால் இந்த டிஜிட்டல் யுகத்தில் இதனை எல்லாம் தடுக்க முடியுமா?
நிச்சயம் முடியாது.
வேறு வகையில் தன்னை நிரூபித்து இதனை பொய்யாக்க வேண்டுமே தவிர, இப்படி பிராது கொடுத்து கொண்டிருந்தால் அது எதிராளிகளுக்கு கொண்டாட்டம் ஆகி இன்னும் அதிகமாக போட்டு கலாய்ப்பார்கள்.
எங்க தலைவரே அங்க காணோம்…