இந்த ரத யாத்திரை பற்றி நாம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்
இந்த ரத யாத்திரை பற்றி நாம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் கட்டுவோம் என சொன்னவர்கள்தான் ஆட்சியில் இருக்கின்றார்கள், அதுவும் மத்தியிலும், உபி மாநிலத்திலும் இருக்கின்றார்கள்
அவர்கள் கழுத்தை பிடித்து வைத்து ராமர் கோவில் என்னாயிற்று என கேட்கலாம், அதை விட்டுவிட்டு இந்தியா எங்கும் ரதம் ஓட்டி விளையாடுவோம் என்பது அர்த்தமில்லாத விஷயம்
இந்த அய்யாகண்ணு என்பவர் பழனிச்சாமியினை விட்டுவிட்டு டெல்லியில் அம்மண போஸ் கொடுப்பதற்கும் இந்த காவி சாமிகள் மோடியினையும் யோகியினையும் விட்டுவிட்டு தமிழகத்தில் ரதம் ஓட்டி விளையாடுவதற்கும் வித்தியாசம் ஏதுமில்லை
அட அவர்கள்தான் ரதம் ஓட்டி விளையாடினார்கள், இதில் தமிழக கட்சிகளும் குறுக்கே அமர்ந்து விளையாடியதல்லவா?
அது இன்னொரு காமெடி
கட்டபடவே போகாத கோவிலுக்கு ஒரு ஊர்வலம், அதற்கொரு எதிர்ப்பு வேறு
அவர்கள் உண்மையான பக்தர்கள் என்றால் அந்த ரதத்தில் மோடி, அத்வாணி, யோகி ஆகியோரை கட்டி வைத்து, ராமர் கோவிலால் ஆட்சிக்கு வந்து இன்னும் கட்டாமல் இருக்கும் துரோகிகளை பாரீர் என இந்தியா முழுக்க இழுத்து வந்திருக்க வேண்டும்
அது உண்மையான ஊர்வலமாக இருந்திருக்கும்