அது என்ன குருத்தோலை ஞாயிறு?
ஓய்வுநாளில் மனிதன் ஓய்ந்திருக்க வேண்டும் என்பது கடவுள் கொடுத்த கட்டளை
அதன்படி யூதர்கள் இன்றும் சனிகிழமை அதிகம் நடக்க கூட மாட்டார்கள், இன்றும் இஸ்ரேலில் கட்ட லிப்டுகளில் கூட சனிகிழமை தானே நின்று செல்லும் லிப்டுகள் உண்டு
ஆம் பட்டனை தொட்டால் வேலையாம்
அப்படி ஓய்வுநாளை மிக நுணுக்கமாக அனுசரிக்கின்றார்கள்
இந்த கிறிஸ்தவமும் இருக்கின்றதே, இம்சைபிடித்தது. ஓய்வு நாளிலும் காலையில் எழு சர்ச்சுக்கு போ, மதியம் வரை விழுந்து கிட என பெரும் அழிச்சாட்டியம் செய்கின்றது
கர்தரின் நல்ல பக்தர்கள் என்றால் ஞாயிற்றுகிழமை வாயே திறக்க கூடாது, ஒரு அடி எடுத்து வைக்க கூடாது. ஆனால் இவர்கள் கர்த்தருக்கே பைபிள் போதிப்பவர்கள் அதனால் அப்படித்தான் இருப்பார்கள்
இன்று குருத்து ஞாயிறு வேறு
அது என்ன குருத்தோலை ஞாயிறு?
இயேசு போதித்த காலங்களில் அவர் ஹீரோ, யூத மத குருமார்கள் அவரை ஒழிக்க தேடினாலும் யூதர்கள் அவரை மீட்க வந்தவராகவே கருதின
இயேசு அதிரடி போதனையால் மட்டுமல்ல, பார்வை கொடுத்தல், பாவங்களை மன்னித்தல், தொழுநோயினை சடுதியில் குணப்படுத்துதல் , ஏன் செத்தவனை கூட உயிர்பித்தல் என பின்னிகொண்டிருந்தார்
அவர் ஜெருசலேமில் நுழைய சில நாட்களுக்கு முன்புதான் லாசர் என்பவனை கல்லறையில் இருந்து உயிரோடு கொண்டு வந்தார், அதனால் பெரும் புகழ் பெற்றிருந்தார்
எல்லா யூதனும் பாஸ்காவில் ஜெருசலேமில் வந்து வழிபட வேண்டும் என்பது அவர்கள் சமயவிதி, அப்படித்தான் அந்த பாஸ் ஓவர் விழாவிற்காக வந்தார்
அவரை கண்ட கூட்டம் அவரை ஆலிவ் மர குருத்து இலைகளை பிடித்து வரவேற்றது
ஆம், பாலஸ்தீன கலாச்சாரபடி ஆலிவ் குருத்து என்பது சமாதானம், நல்வாழ்வின் அடையாளம், யாசர் அராபத் கூட ஐநாவில் ஒரு கையில் ஆலிவ் குருத்து மறுகையில் துப்பாக்கியாய் நின்று எதுவேண்டும் என கேட்டார்
அப்படி சமாதமாக மகிழ்வாக அவரை வரவேற்றது அன்றைய யூத கூட்டம்
ஆனால் 4 நாட்களிலே இதே இயேசுவினை சிலுவையில் அறையுங்கள் என சொன்னதும் இதே கூட்டம்தான்
ஏன்?
இயேசு ஜெருசலேம் தேவாலயத்தை இடித்து 3 நாளில் கட்டுவதாக சொன்னவர் என அவர்ளின் குருமார்கள் சொல்ல, உடனே இயேசுவை கொல்ல துணிந்தது இதே கூட்டம்
அவர்களின் ஜெருசலேம் கோவில் அபிமானம் அப்படி, அதற்காக அந்த இயேசுவினை கொல்ல நொடியில் துணிந்தார்கள்
இன்று யூதர்கள் எப்படி இருகின்றார்கள்?
2000ம் ஆண்டாக இந்த உலகில் சூரியன், சந்திரன் அடுத்து மாறாத ஒன்று உண்டென்றால் யூதர்களின் அதே ஜெருசலேம் கோவில் பற்று
இன்றும் அதனை கட்டத்தான் உலகோடு மல்லுகட்டி பாதி வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள்.
உலகெல்லாம் அடிவாங்குவார்கள், உயிரையும் இழப்பார்கள், சொத்துக்கள் நாசமானாலும் கவலையுற மாட்டார்கள்,
சம்பாதித்து கொண்டே ஓடுவார்கள்
2000 வருடமாக இப்படி ஒரு இருக்க முடியுமா என்றால் நிச்சயம் யூதர்களை தவிர யாரும் இருக்க முடியாது
அன்று இயேசுவிற்கு ஆலிவ் குருத்து பிடித்த அதே இனம், விரைவில் அல் அக்சா மசூதியினை இடித்துவிட்டு யூத ஆலயம் அமைக்க இருக்கும் தங்கள் மெசியாவிற்கும் ஆலிவ் குருத்து காட்டி வரவேற்க மிக தயாராய் இருக்கின்றது