ஸ்டெர்லைட் பற்றி பிராதன கட்சிகள் ஏன் வாய்திறக்கவில்லை?
இன்னும் ஸ்டெர்லைட் பற்றி பிராதன கட்சிகள் ஏதும் வாய்திறக்கவில்லை
திமுகவின் ஈரோடு தீர்மானம் கூட அதனைபற்றி சொல்லவில்லை, ஒரு வார்த்தையும் செய்தி இல்லை
பழனிச்சாமி அரசு நிச்சயம் பேசாது
பாஜகவும் காங்கிரசும் வேதாந்தா குழும அடிமைகள். தமிழக பாஜகவும் காங்கிரசும் டெல்லியிடம் அனுமதிபெறாமல் வாய் திறக்காது என்பதால் அவைகளிடம் ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது
பாஜக தூத்துகுடி அருகே திருச்செந்தூரில் ரதம் ஓட்டி விளையாடுகின்றது, அந்த கட்சி அப்படித்தான்
வைகோ கூட களத்தில் முழுமையாக இறங்கியதாக தெரியவில்லை
ஊடகங்கள் அப்படி ஒரு ஆலை இருப்பதாகவோ, அங்கு லட்சகணக்கான மக்கள் இருப்பதாகவோ நினைக்கவே இல்லை
தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்ததிற்காக கவலைபடும் ஊடகம் இதனை கண்டுகொள்ளவில்லை
ஏராளமான சினிமா தொழிலாளர்கள் பாதிக்கபடுகின்றார்கள் என சொல்லும் திரையுலகம் வேலை, பள்ளி எல்லாம் விட்டு ஸ்டெர்லைட் ஆலைமுன்னால் திரண்டிருப்பவரை பற்றி பேசவில்லை
ஏன் என்றால் விஷயம் ஒன்றுதான்
ஸ்டெர்லைட்டிடம் எல்லா கட்சிகளும் ஊடகங்களும் கணிசமாக வாங்கியாயிற்று, அதனால் மகா அமைதி
அரசியல்வாதிகள் நுழையாததால் ஸ்டெர்லைட் போராட்டம் வெற்றிபெற முழு வாய்ப்பிருக்கின்றது
ஸ்டெர்லைட் விவகாரமும் போராட்டமும் சொல்வது ஒன்றுதான், இந்த ஊடகங்களை பார்த்து அன்றொரு நாள் விஜயகாந்த் காரி துப்பியது மிக சரியான விஷயம்