அதிமுக எம்பி அன்வர் ராஜா மீது புகார்
அதிமுக எம்பி அன்வர் ராஜா மீது திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியதாக புகார் : செய்தி
என்னடா இது?
தமிழக எம்பிக்கள் எல்லாம் தமிழக உரிமைக்காக போராடுவார்கள் என டெல்லிக்கு அனுப்பினால் ஆளாளுக்கு காசு மோசடி இரண்டாம் திருமணம் என என்னவெல்லாமோ செய்திருக்கின்றார்கள்
இவர்கள் அழிச்சாட்டியத்தை விசாரிக்கவே தனி மன்றம் அமைக்கவேண்டும் போலிருக்கின்றது
சசிகலா புஷ்பா திருச்சி சிவா இடையே விமான நிலையத்தில் நடந்த பகிரங்க “இறுதி சுற்று” குத்துகளுக்கு பண விவகாரமே பிராதனம் என்றது செய்திகள்
இப்பொழுது ராமசாமி என்பவரை அம்மணி பிடித்தும் கொண்டார்
அதிரடியாக இப்பொழுது அன்வர் ராசா மீது இன்னொரு பெண் புகார் கொடுக்கின்றார்
இதற்கெல்லாம் என்ன காரணம் தெரியுமா?
எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கமா? பழனிச்சாமி பக்கமா என்ற பந்தயத்தில் எம்.எல்.ஏக்கள் காட்டில் எல்லாம் பணமழை கொட்டுகின்றது
ஆனால் எம்பிக்கள் யார் பக்கம் என்ற பந்தயம் வரவுமில்லை, அவர்களை கவனிப்பாருமில்லை
இதனால் இம்மாதிரி சில்லறை கலெக்சன்களில் அவர்கள் இறங்கிவிட்டார்கள். எம்.எல்.ஏக்கள் போல எம்பிக்களையும் பழனிச்சாமியும் தினகரனும் கவனித்தால் அவர்கள் ஏன் இப்படி திசைமாறுகின்றார்கள்??
எம்பிக்கள் யார் கட்டுபாடு என இரு அணிக்குமே தெரியவில்லை, தங்களை எந்த அணி வைத்திருக்கின்றது என அந்த எம்பிக்களுக்கும் தெரியவில்லை, அய்யோ பாவம்
டெல்லிக்கு அனுப்பி பேசசொன்னால் இப்படி பக்கவாட்டில் பாய்வது
பின்பு எங்கிருந்து காவேரி வரும்? எங்கிருந்து நீட் தேர்வில் நியாயம் கிடைக்கும்?
பின்பு டெல்லி தமிழகத்தை வஞ்சித்தது என ஆளாளுக்கு பேசவேண்டியது
அடுத்து எந்த அதிமுக எம்பி சிக்குவார் என எதிர்ப்பார்ப்போம், நம் கவலை நமக்கு.
இனி அதிமுக எம்பிக்களை டெல்லிக்கு அனுப்பும் முன் இரண்டாம் திருமணம் செய்யமாட்டேன் என ஜெயா ராமசந்திரன் சமாதி முன் சத்தியம் வாங்கிவிட்டுத்தான் அனுப்ப வேண்டும்