ஹர்பஜன் சிங், முரளீதரன் எல்லாம் வெடிபோட்டு கொண்டாடும் நேரமிது

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்மித்தும், வார்ணரும் பெரும் சிக்கலில் சிக்கிவிட்டார்கள்

அதாவது கிரிக்கெட்டில் பந்து வீச்சு என்பது போர்கலை. பந்தை ஸ்விங் செய்ய அதில் ஒரு பிடி கிடைக்க வேண்டும்

பந்தை எடுத்து வயிற்றுக்கு கீழ் தேய்ப்பதெல்லாம் இந்த வகையில் வராது. இது பந்தினை சேதபடுத்தி விரல் இருக்கமாகவும் சுழற்றிவிடவும் செய்யபடும் வேலை

பாகிஸ்தானின் இம்ரான்கான் இதில் வசமாக சிக்கினார், அவர் குளிர்பான மூடி கொண்டு பந்தின் நூலை பிரித்து அதற்கு தண்டனை பெற்ற காலம் உண்டு

இப்பொழுது ஆஸ்திரேலிய வீரர்கள் சிக்கி இருக்கின்றார்கள்

கையும் களவுமாக பிடிபட்டுவிட்டதால் ஆஸ்திரேலிய மானம் போனது என அவர்கள் பிரதமரே சனியன்களை துரத்துங்கள் என உத்தரவு போட்டுவிட்டார்

அடுத்த நாட்டு பந்து வீச்சாளர்களை ஆஸ்திரேலியர்கள் படுத்தும் பாடு கொஞ்சமல்ல‌

முத்தையா முரளிதரன், ஹர்பஜன் சிங், மலிங்கா என பலரை அவமானபடுத்தியவர்கள்

இப்பொழுது மிக வசமாக சிக்கி அவமானபட்டிருப்பதால் இப்படித்தான் உலக சாம்பியன் ஆனீர்களா என கிரிக்கெட் உலகம் சிரிப்பாய் சிரிகின்றது

என்ன இருந்தாலும் லண்டன் ஐசிசிக்கு ஆஸ்திரேலியா மனதிற்குள் விரோதி , இதனால் இருவருக்கும் வாழ்நாள் தடை விதிக்கபடலாம் என்ற பரபரப்பு வருகின்றது

ஹர்பஜன் சிங், முரளீதரன் எல்லாம் வெடிபோட்டு கொண்டாடும் நேரமிது