தன்னலம் துறந்த “பொதுநல பொன்னியார்” துர்கா ஸ்டாலின்

Image may contain: 8 people, people smiling, people standing and indoor

ஆக திமுகவின் ஈரோடு மண்டல மாநாடு இயற்றபடாத தீர்மானமாக சொல்லியிருப்பது என்ன தெரியுமா?

கட்சியில் மகளிருக்கு 50 சதவீத இடம் ஒதுக்கியாயிற்று, இந்த 50 சதவீத இடத்தையும் ஸ்டாலினின் மனைவி திராவிட போராளி , தன்னலம் துறந்த “பொதுநல பொன்னியார்” துர்கா ஸ்டாலினே நிரப்புவார்

அப்படி யாரெல்லாம் கொண்டு நிரப்பியிருகின்றார் என்றால் கலைஞரின் இன்னொரு மகள் செல்வி இன்னும் சிலர்

கலைஞர் மகள் செல்வி திமுகவிற்கு செய்த பெரும் சேவை என்னவென்றால் குடும்ப சண்டை வரும்பொழுதெல்லாம் சமாதானம் செய்வது, எப்படிபட்ட கட்சி சேவை அது?

அந்த இன்னும் சிலரில்தான் வில்லங்கம் வருகின்றது

“பொதுநல பொன்னியார்” துர்கா ஸ்டாலின் அருகில் இருப்பது , லீமா ரோஸ் , அதாவது லாட்டரி மோசடி மார்ட்டின் என்றொரு பிரபல மோசடி மன்னன் உண்டல்வ்வா?

அவரின் மனைவி

கேட்டால் மார்ட்டினின் தயாரிப்பில் கலைஞர் வசனம் எழுதிய காலமும் உண்டு என்பார்கள், அதாவது பெரும் மோசடிகுடும்பத்தோடு திமுகவிற்கு தொடர்பு உண்டு என்பார்கள், வெட்கமே இன்றி சொல்வார்கள்

அந்த உறவு இன்னமும் தொடர்கின்றது என்பதைத்தான் படம் காட்டுகின்றது

திமுகவில் எப்பொழுதும் விசித்திரம் நடக்கும், உண்மையான உழைப்பாளிகள் தொண்டர்கள் அறிவாளிகள் இருப்பார்கள்

ஆனால் பெரும் பதவி மட்டும் முரசொலிமாறன், தயாநிதி மாறன், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என செல்லும், மற்றவர்கள் எல்லாம் திமுக எதிர்கட்சியாக இருந்தால் மட்டும் பயன்படுவார்கள்

அப்படியாக இனி திமுக ஆட்சிக்கு வந்தால் துர்கா ஸ்டாலின், லீமா ரோஸ் , செல்வி எல்லாம் பெண்கள் அணியில் முன்னிறுத்தபடலாம்

திமுக தோற்றால் இந்த எதிர்கட்சி , போராட்டம், மறியல், கண்டனம் போன்றவற்றிற்கு சுப்புலட்சுமி ஜெகதீசன், தமிழச்சி , சல்மா போன்ற முகங்கள் நிறுத்தபடலாம்

வென்றால் சில முகம், தோற்றால் சில முகம் என்பது அன்பழகன் காலத்தில் இருந்தே அங்கு தொடர்வது என்பதால் சிக்கல் இல்லை

அந்த பொதுநல பொன்னி துர்கா ஸ்டாலினுக்கு லீமா ரோஸை அழைக்க வேண்டும் என தோன்றிய அளவுக்கு சந்தண வீரப்பன் மனைவி முத்துலட்சுமியினை அழைக்க ஏன் தோன்றவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

அடுத்த மாநாட்டில் முத்துலட்சுமி வீரப்பனை துர்கா ஸ்டாலின் அழைப்பார் என எதிர்பார்ப்போம்

சொன்னால் திட்டுவார்கள், ஆனால் உண்மை அதுதான். திமுகவில் ஒரு சசிகலா உருவாகிகொண்டிருக்கின்றார்.