தலைவி தலைவி ஏம் என்னை கைவிட்டாய்
ஏதோ தோன்றுவதை எழுதுகின்றோம் என எழுதிகொண்டிருந்தால் விஷயம் பெரிதாகின்றது
பலர் பின் தொடர்கின்றார்கள், சிலர் கவனிக்கின்றார்கள் என்றுதான் நினைத்துகொண்டிருந்தோம் ஆனால் இப்பொழுது திசை மாறுவது போல் தோன்றுகின்றது
போலி கிறிஸ்துவத்தை அல்லது இந்துக்களின் சில நியாயங்களை எழுதுவோம் என எழுதினால் அது எங்கே செல்கின்றது தெரியுமா?
சொல்லவே நடுக்கமாய் இருக்கின்றது
ஆம் H. Raaja என்பவரின் பக்கத்திற்கு செல்கின்றது, அதனை பார்க்கும்பொழுதே பகீர் என்கின்றது
அவர் ஒருமாதிரியானவர் என்பதால் அடிவயிற்றில் உருளை உருண்டு தொண்டை வரை வருகின்றது.
இவரெல்லாம் நம்மை கவனிக்க ஆரம்பித்துவிட்டாரா இனி கடையினை சாத்திவிட்டு கிளம்பு என உள்மனம் எச்சரிக்க ஆரம்பித்தாயிற்று
ஆனாலும் அவரை வசைபாடியும் எழுதியிருக்கின்றோம் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் செல்கின்றார்கள் என்பதில் கொஞ்சம் ஆறுதல்
அவரது அட்மின் மிக பெருந்தன்மையானவர் என்பது புரிகின்றது, அட்மினுக்கு நன்றி
எனினும் இனி எதுவும் எழுத கூடாது என ஒரு அச்சம் மேலோங்குகின்றது.
ஆனாலும் ஒரே ஒரு கேள்வி அலைபோல் அடிக்கின்றது
இவர்கள் எல்லாம் நம் பதிவினை பார்க்கின்றார்கள், நல்லதோ கெட்டதோ ஆனால் பார்க்கின்றார்கள் தேவையானதை எடுத்துகொள்கின்றார்கள்
ஆனால் தங்க தலைவி பார்வைக்கு ஒன்றுமே செல்லவில்லையா? அவர் ஒரு பதிவினை கூட நோக்கவில்லையா?
அய்யகோ என்ன கொடுமை இது?
சங்கம் மிக்க துயரமும் வருத்தமும் கொள்ளும் நேரமிது.
கதறி கதறி அழுதுகொண்டிருக்கின்றது சங்கம்.
“தலைவி தலைவி ஏம் என்னை கைவிட்டாய்”