மேற்காசியாவில் சனி பிடிக்க போகும் நாடுகளில் துருக்கியும் ஒன்று
இனி மேற்காசியாவில் சனி பிடிக்க போகும் நாடுகளில் துருக்கியும் ஒன்று
முதலாம் உலகப்போருக்கு முன்னரான 400 ஆண்டுகளின் வரலாற்றை நிர்ணயித்த நாடு துருக்கி, ஆட்டோமான் சாம்ராஜ்யமும் அதன் பெரும் பலமும் மகா ஆச்சரியமானவை
வாஸ்கோடகாமாவும், கொலம்பஸும் கடலில் திரிந்ததற்கு முதல் காரணம் துருக்கி, அவர்கள்தான் நிலவழி பாதையினை ஐரோப்பியருக்கு அடைத்தார்கள்
நெப்போலியனால் கூட அவர்களை வெல்லமுடியவில்லை, எதிர்க்கவே தயங்கினான்
அப்படிபட்ட துருக்கி முதலாம் உலகப்போருக்கு பின் சரிந்து பரிதாபமாகி பின் ஐரோப்பாவின் நோயாளி என பரிகசிக்கபட்டும் பின் கமால் பாஷா காலத்தில் சீரானது, இன்று ஐரோப்பாவின் ஒரே இஸ்லாமிய நாடு துருக்கி
இப்பொழுது என்ன சிக்கல்
துருக்கி அதிபர் எர்டோகன் கொஞ்சம் அடாவடி பார்ட்டி, அமெரிக்க எதிரி போல ஆகிவிட்டார். இப்பொழுது சிரிய அகதிகள் விவகாரத்தில் முக்கிய பங்கு, ஐஎஸ் குர்து ஒழிப்பில் பிசி என்பதாலும் சில பெரிய இடங்களுக்கு ஆசைபடுகின்றார்
பெரிய ஆசை என்றால்?
இஸ்லாமியருக்கு எல்லாம் தலைவர் எனும் ஆசை
இந்த ஆசையினை யாரெல்லாம் கண்டார்கள் என்றால் எகிப்தின் நாசர், ஈராக்கின் சதாம் உசேன், லிபியாவின் கடாபி
பின்லேடனும் இந்த வகையில் வருவார்
இவர்கள் திட்டம் என்னவென்றால் இஸ்ரேல் வெல்ல முடியா தேசம் அல்ல, இஸ்லாமியர் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் வெல்லலாம்
ஆனால் இஸ்லாமியர் ஒன்று சேர்ந்தார்களா? சேர்வார்களா என்றால் ஒருகாலமும் இல்லை
எகிப்து பெரும் பலத்துடன் 1960, 70 களில் 10 நாடுகளோடு மிரட்டி யுத்தம் தொடங்கியபொழுது, இஸ்ரேல் அட்டகாசமாக வென்றது
நாசர் அதன் பின் எழும்ப முடியவில்லை, இஸ்ரேலின் மோசே தயானின் அடி அப்படி இருந்தது
சதாம் உசேன் ஈரானோடு மோதி, குவைத்தை பிடித்து வேறு சிக்கலில் வீழ்ந்ததால் இஸ்ரேலோடு மோத வாய்ப்பில்லாமல் போனது, ஆனாலும் வளைகுடா போரில் அவர் வீசிய ஸ்கர்ட் ஏவுகனைகளுக்கு பதிலாக அமெரிக்கா பேட்ரியாட் ரக ஏவுகனைகளை கொடுக்க இஸ்ரேல் என்ன செய்தது?
தோல்வி அடைந்த பேட்ரியாட்டை அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து ஏரோ என ஏவுகனை செய்து வெற்றிகரமாக சோதித்து தன் ஏவுகனை என்றது
லிபிய அதிபர் கடாபி அணுகுண்டு செய்துவிட்டு இஸ்ரலோடு மோத காத்திருந்தபொழுது உள்நாட்டு மக்களாலே கொல்லபட்டார்
இப்பொழுது துருக்கியின் எர்டோகான் அதே வரிசைக்கு வந்து அதே சவால் விடுகின்றார்
இவர் அந்த தலைவர்களின் முடிவே பெறுவாரா இல்லை ஏதும் சாதிப்பாரா என தெரியவில்லை
ஆனால் இன்று இருக்கும் நிலமையில் நாசரும், சதாமும், கடாபியும் செய்யமுடியா விஷயத்தை எர்டோகன் நிச்சயம் செய்ய முடியாது
எனினும் இவரின் இந்த ஆசைக்காக விரைவில் துருக்கி என்னபாடு பட போகின்றதோ தெரியாது
ஆனால் இருக்கும் நிலமையில் நாசரும், சதாமும், கடாபியும் செய்யமுடியா விஷயத்தை எர்டோகன் நிச்சயம் செய்ய முடியாது
துருக்கியில் சனிபகவான் தன் இடதுகாலை வைத்து குடிபோகும் காட்சி அரசியல் நிபுணர்கள் கண்களுக்கு பிரகாசமாக தெரிகின்றது