தமிழகத்தை நம்மையும் அறியாமல் தனிமைபடுத்தி இருக்கின்றோம்

நிச்சயம் நதிநீர் பிரச்சினை என்பது எல்லா மாநிலங்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்து வருவது

தமிழகம் காவேரி விவகாரத்தில் மிக அநியாயமாக ஏமாற்றபட்டிருக்கும் நிலையில், இம்மாநிலத்திற்கு ஆதரவாக இந்நாட்டில் ஒரு குரல் இல்லை

ஒரு மாநில‌ கட்சி கூட , ஒரு எம் எல் ஏ , எம்பி கூட, ஒரு கட்சி தலைவர் கூட தமிழகத்தின் பக்கம் இருக்கும் நியாயத்தை ஆதரித்து குரல் கொடுக்கவில்லை.

அந்த அளவு இந்தியா முழுக்க இருந்து தமிழகத்தை நம்மையும் அறியாமல் தனிமைபடுத்தி இருக்கின்றோம்

ஒழுங்காக பிரிவினையும் பேசாமல், மாநில நலமும் காக்காமல், தேசிய அரசியலுலும் இணையாமல், ஒரு மாதிரி அரசியல் செய்து இம்மாநிலத்தை இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து தனிமைபடுத்தி விட்டோம்

இதனால் மாபெரும் அநியாயம் நடந்தும் அவர்கள் எல்லாம் மகா அமைதி காக்கின்றார்கள், தேசிய கட்சி தலைவர்களை விடுங்கள், மாநில கட்சி தலைவர்களுடன் கூட நல்லுறவு இல்லா நிலையில் அவர்கள் கூட மூச் விடுவதில்லை

எவ்வளவு தூரம் தனிமைபட்டு நிற்கின்றோம் என தெரியும் நேரமிது, இது இன்னும் அதிகரிக்குமே தவிர குறையாது

இன்னும் எவ்வளவு நாசமாகி இருக்கின்றோம் என்பது போக போக தெரியும்

ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும் என்பார்கள், ஊரோடு ஒத்துவாழ் என்பார்கள்

அப்படியும் வாழவில்லை, இப்படியும் வாழவில்லை விளைவு தமிழகம் சுடுகாடாய் மாறிகொண்டிருக்கின்றது