திமுக மறுபடி டீசன்ட் கட்சியாயிற்று
அண்ணா காலத்தில் திமுக கொஞ்சம் பண்பாடான கட்சி என அறியபட்டது, அவரது பேச்சும் அணுகுமுறையும் அப்படி
பின்னாளில் அதன் போக்கு மாறிற்று
டெல்லியிலிருந்து வருவபர்கள் சர்ச்சைகுரியவர்கள் என்றால் “அவர்கள் மீது முட்டைகளை எறியாதீர்கள் , கற்களை எறியாதீர்கள், அவர்கள் நம் விருந்தினர்கள் அவர்கள் மேல் அழுகிய தக்காளிய்னை எறியாதீர்கள்
மன்றாடி கேட்கின்றோம் எறியவே எறியாதீர்கள்” என்றெல்லாம் வசனம் கேட்கும்
அதன் அர்த்தம் எறிய வேண்டாம் என்பதே அல்ல. இதனால் அவை எல்லாம் எறியபட்ட சம்பவமும் உண்டு
இந்திராகாந்தி நேரடியாகவே தாக்கபட்டார், ரத்தம் வழிய அவர் டெல்லிக்கு சென்றார், அப்பொழுதும் பெண்ணின் சேலையில் வழிந்த ரத்ததிற்கு பதில் சொல்ல முடியுமா? என மகா இழிவாக பெண்மையின் தன்மையினை கொச்சைபடுத்தி எல்லாம் பேசியதாக குறிப்புகள் உண்டு
இப்பொழுது மறுபடி அது டீசன்ட் கட்சியாயிற்று, இம்முறை மோடிக்கு கருப்பு கொடி மட்டும் காட்டுவார்களாம் , ஆக முக ஸ்டாலினை தளபதி என சொல்வதிலும் அர்த்தம் இருக்கின்றது
அன்றைய தளபதி அண்ணா போல இந்த தளபதி ஸ்டாலினும் கட்சியினை டீசன்டாக மாற்றிவிட்டார்
இனி இரண்டாம் மூன்றாம் கலைஞர் வந்தால்தான் அழிச்சாட்டியங்கள் இருக்கும் போல