இதுதான் தமிழன், இதன் பெயர்தான் வெறுப்பு வளர்க்கும் அரசியல்

அப்பொழுதும் தமிழ்நாட்டை கெடுக்கும் டாஸ்மாக்கினை உடைப்பதை தவிர்த்து, தமிழகத்தை கெடுத்த திரையரங்கை உடைப்பினை தவிர்த்து,

தமிழகத்தை ஆண்ட கட்சிகளை விட்டுவிட்டு, ராமசந்திரன் ஜெயா சிலைகளை எல்லாம் விட்டுவிட்டு, தமிழரின் முதல்வர் என அமர்ந்திருக்கும் பழனிச்சாமி கட்டவுட்டினையும் விட்டுவிட்டு ,

எங்கோ சென்று டோல் கேட்டை உடைத்திருக்கின்றான் அல்லவா?

இதுதான் தமிழன், இதன் பெயர்தான் வெறுப்பு வளர்க்கும் அரசியல்

உடைப்பதாக இருந்தால் ராமசந்திரன், ஜெயா கல்லறையினை உடையுங்கள், இன்னும் சில இருக்கின்றன‌உடைப்பதற்கு .

சில கட்சிகளின் அலுவலகங்களை உடையுங்கள்

கொடநாடு எஸ்டேட்டை தொட்டுபார்க்க எவனாவது தயாரா?

டோல்கேட் சுரண்டுகின்றது என்றால் கொடநாடு எஸ்டேட் எங்கிருந்து வந்தது?

சசிகலா கோஷ்டிக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? அவர் வீட்டு செங்கலை தொட்டுவிடட்டும் பார்க்கலாம்

தமிழனை சுரண்டி இங்கே கோடீஸ்வரனானவனை எல்லாம் விட்டுவிடுவார்களாம், அவர்கள் சுரண்டலில் சேர்த்த சொத்துக்களை தொட மாட்டார்களாம், ஆனால் மத்திய அரசே சுரண்டாதே என டோல் கேட்களை நொறுக்குவார்களாம்

தமிழர் வாழ்வுரிமை என்பது எவளோ எஸ்டேட் வாங்குவதும் எவனோ பெரும் தொழில் நிறுவணங்களை நடத்துவதுமா?

உடைக்க வேண்டியது சில கட்சிகளின் கொடிகம்பங்கள், எரிக்க வேண்டியது வயிறு வளர்க்கும் மோசடிகளின் கட்சி கொடிகள்

ஆக உடைக்க வேண்டியதும், எரிக்க வேண்டியதும் தமிழகத்தில் ஏராளம் இருக்க இவர்கள் டோல்கேட்டை உடைத்து தேசியகொடியினை எரிப்பார்களாம்

இதனையும் சிலர் பாராட்டுவார்களாம்