தனிநாடானால் கூட இந்த டோல்கட்டணம் பன்மடங்கு ஆகும்
டோல்கேட் அதிகமாம், காரில் செல்ல முடியவில்லையாம் அப்படி தமிழரை சுரண்டுகின்றார்களாம்
இதனால் அடித்து உடைத்துவிட்டார்களாம், இதற்கும் சிலர் பாராட்டுக்கள் . நாம் ஏதும் சொன்னால் தமிழக டோல் கொடுமை உனக்கு எப்படி தெரியும் என வியாக்கியானம் வேறு
டோல்கேட் எந்த நாட்டில் இல்லை?, எல்லா நாட்டிலும் உண்டு. ஆனால் இந்தியாவில் டோல் அதிகம் என்கின்றார்களே ஏன்?
மற்ற நாடுகளில் கார்கள் விலை அப்படி. புதுகார் வாங்கும்பொழுது வரி என கிட்டதட்ட காரின் விலையில் முக்கால்வாசி வரும்
அந்த வரி போக, வருடாவருடம் கட்டும் சாலைவரி இன்னபிற வரிகள் மூலமாகவே சாலைகள் அங்கு பளபளவென்று இருக்கின்றது
எதற்கெடுத்தாலும் சிங்கப்பூரினை பார் என்பவர்கள் இப்பொழுது கப்சிப், காரணம் சிங்கப்பூரில் கார் வைத்திருப்பது 100 யானைகளை வைத்திருப்பதற்கு சமம், அந்த அளவு கெடுபிடி
இங்கு ஏன் கார்விலை நிச்சயம் உயரத்தில் இருக்கவேண்டும், ஆனால் மிகபெரிய சந்தை அல்லவா? பல அரசியல் கார்பரேட் இன்னபிற தந்திரம், உலக அரசியல் காரணமாக இங்கு குறைவு
கார் குறைந்த விலையில் கொடு என மிரட்டும் சக்திகள் முன்னால் இந்திய அரசு என்ன செய்யமுடியும்? சாலைவரியினை அதோடு கூட உயர்த்தினால் கார் விற்காது, விடுமா வெளிநாடுகள்?
உபயம் அது கார் விலை குறைவு , டோல்விலை அதிகம் என்பது போல் விடிகின்றது
சரி இவ்வளவு கார்கள் ஓடுகின்றது, இந்திய தயாரிப்பு கார் என எது உண்டு? என சிந்தித்தால் நொடியில் விளங்கும் உண்மை இது
ஆனால் யோசிக்கமட்டார்கள், அப்படி யோசித்தால் ராமசந்திரன், ஜெயா, பழனிச்சாமி பன்னீர் எல்லாம் எப்படி வந்து முதல்வராக அமரமுடியும்?
ஆக இவர்களுக்கு காரும் சல்லி விலையில் வேண்டும், ரோடும் மிக தரமாக இருக்க வேண்டும் ஆனால் டோல் மட்டும் கட்டிவிட கூடாது
இப்படி ஒரு தந்திரமான இனம் உலகில் எங்காவது உண்டா? தமிழகத்தை தவிர எங்கும் சாத்தியமில்லை
நாளை தனிநாடானால் கூட இந்த டோல்கட்டணம் பன்மடங்கு ஆகுமே தவிர நிச்சயம் குறையாது