காவேரி போராட்டத்திற்காக 3ம் தேதி கடையடைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஓபிஎஸ் இபிஎஸ் ஒரு நாள் உண்ணாவிரம் : செய்தி

ஒருநாள் மட்டும்தானா? சாகும் வரை இல்லையா?


தமிழகத்தில் காவேரி போராட்டத்திற்காக 3ம் தேதி கடையடைப்பு என்கின்றார் விக்கிரம ராஜா, இவரின் சங்கத்தில் உணவகம் எல்லாம் வரும் என்கின்றார்கள்

இன்னொரு வியாபாரி சங்கமான வெள்ளையன் கோஷ்டி 11ம் தேதி கடையடைப்பு செய்யுமாம்

மு.க ஸ்டாலின் 5ம் தேதி கடையடைப்பு என கோரிக்கை வைக்கின்றார்

ஆக மூன்று நாட்கள் கடை அடைப்பு செய்ய வேண்டுமாம், குறைந்தது இரு நாட்கள் பள்ளி, மருத்துவமனை எல்லாம் கடைகளை விட நிரம்ப சம்பாதித்தாலும் அவை கடை என்ற வகையில் வராது அதனால் திறந்திருக்கும்

இதில் முக ஸ்டாலினின் ஆங்கில பள்ளியும் நிச்சயம் அடைக்கபடாது, அதெல்லாம் கல்வி பணி

கலைஞர் டிவி, சன்டிவி எல்லாம் பணியாற்றும் காரணம் அது ஊடகபணி, அந்த ஊடகபணியோடு நடக்கும் விளம்பர வருமானம் , சின்னதிரை வருமானம் எல்லாம் அதுபோக்கில் நடக்கும்

அது ஊடகம் என்பதால் யாரும் கண்டுகொள்ள கூடாது, அவர்களின் ஒரு நாளைய வருமானமான சில‌ லட்சங்கள் சரியாக வந்துவிடும்

அவர்கள் டிவி,ரேடியோ எல்லாம் வழக்கமான விளம்பரத்தை ஒளிபரப்பி சம்பாதிப்பார்கள், ஒரு பைசா இழக்க மாட்டார்கள்

அப்பாவி வணிகர்கள் மட்டும் கடை அடைத்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், அவர்கள் வருமானம் நாசமாக வேண்டும்

இதை எல்லாம் சொன்னால் நாம் ஆர்.எஸ்.எஸ் கைகூலி அல்லது ஆரிய அடிவருடி


மோடியின் தமிழக பயணம் ரத்து

அதானே, தமிழகம் தனிநாடாக இருந்தால் அடிக்கடி வந்திருப்பார், இம்முறையும் வந்து அட்டகாசமாக போஸ் கொடுத்திருப்பார்.

அது இந்திய மாநிலமாக இருந்து தொலைத்துவிட்ட பின் எப்படி வர விரும்புவார்?