சாதிய வன்கொடுமை தடை சட்டம் என்றொரு சட்டம்
தாழ்த்தபட்டவருக்கு எதிராக செய்யபடும் கொடுமைகளை தடுக்க சாதிய வன்கொடுமை தடை சட்டம் என்றொரு சட்டம் சுதந்திர இந்தியாவில் உண்டு
அதன்படி தாழ்த்தபட்ட சாதியினை அச்சாதி அடையாளத்தோடு திட்டினால் உடனே திட்டியவரை கைது செய்யலாம்
இதில் எவ்வளவு நன்மை உண்டோ அவ்வளவு ஆபத்தும் உண்டு, நியாயமான சில ஊழியர்களை யாரும் கண்டித்தால் என்னை சாதிபெயரால் திட்டுகின்றார்கள் என புகர் கொடுத்துவிடும் அபாயமும் உண்டு
இதற்கு வழிகாட்டியவர் சாட்சாத் கலைஞர். முதலமைச்சாகும் பொழுதோ, மத்தியில் ஆட்சியில் பங்குபெறும் பொழுதோ ஒன்றும் சொல்லமாட்டார்
ஆனால் அவரை யாரும் விமர்சித்துவிட்டால் “ஒரு தாழ்த்தபட்டவன் உயர்ந்துவிட்டான் என்றுதானே பொறுக்கமுடியாமல் பொங்கி தீர்க்கின்றீர்கள்?” என ஒரே போடாக போட்டுவிடுவார்.
இதே பாணி வட இந்தியாவிலும் வந்தது. இது தாழ்த்தபட்ட மக்களுக்கு மிக பாதுகாப்பான சட்டம் எனினும், சில நியாமான ஊழியர்கள் தாழ்த்தபட்டோர் அல்லாதோர் பாதிக்கபடவும் காரணமாயிற்று
இந்த சிக்கல் கொஞ்சகாலம் இருந்தது, உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கபட்டது
இப்பொழுது உச்சநீதிமன்றம் சாதிய வன்கொடுமை வழக்கு பாய்பவர்களை உடனடியாக கைது செய்ய அவசியமில்லை, கொஞ்சம் நிதானமாக செய்யலாம் என சொல்லிவிட்டது
இது வட இந்தியாவில் பெரும் கலவரமாக வெடிக்கின்றது, பலர் இறந்தாயிற்று கலவரம் நின்றபாடில்லை
தமிழக தலித் காவலர்கள், திமுக எல்லாம் காவேரியில் பிசி என்பதால் இங்கு கலவரமில்லை இல்லாவிடில் ஆடிதீர்த்திருப்பார்கள்
இப்பொழுது எழும் கேள்வி ஒன்றுதான்
உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு சொல்லியிருக்கின்றது அதனை எதிர்த்து வட இந்தியா கலவரத்திலே குதிக்கின்றது, மாநில எல்லை தாண்டி இது பல மாநிலங்களில் நடகின்றது
இதே உச்சநீதிமன்ற தீர்ப்பை கொஞ்சமும் மதிக்காமல் காவேரி விஷயத்தில் அடம் பிடிக்கின்றது மத்திய அரசும், கன்னட அரசும்
ஆனாலும் தமிழகம் அறவழியில் போராடுகின்றது
ஆக இந்தியாவில் நாகரீகமான, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கும் ஒரே இனம் தமிழனினம் மட்டுமே
ராமர் பெயரை சொல்லி பா.ஜ.க. மக்களை ஏமாற்றி விட்டது : பிரவின் தொகாடியா
இது புரிய 4 ஆண்டுகள் ஆனதா மிஸ்டர் தொகாடியா?
பாஜக 4 ஆண்டுகளாக ஏமாற்றும்பொழுது நீர் எங்கே இருந்தீர்? கூடவேத்தான் இருந்தீர்
பாஜகவினை விட மகா மோசமான ஏமாற்றுக்காரராக இந்த தொகாடியா இருப்பார் போலிருக்கின்றது