காவேரி என்றால் வாட்டாள் நாகராஜ் குதிப்பார்

தமிழ்நாட்டில் ஈழ சர்ச்சை என்றால் அங்கிள் சைமன் கோஷ்டி குதிப்பதை போல கன்னடத்தில் காவேரி என்றால் வாட்டாள் நாகராஜ் குதிப்பார்

இரண்டுமே ஒரே வகை, இரண்டுமே 4 வோட்டு வாங்காது, இரண்டுமே வெற்று சவுடாலில் காலம் தள்ளுபவை

இப்போது தனக்கான நேரம் என்பதால் வாட்டாள் வந்துவிட்டார், ஏப்ரல் 5ம் தேதி ஆர்ப்பாட்டம் அப்படியே ரஜினி படத்தை விடமாட்டேன் என சவால் விட்டுகொண்டிருக்கின்றார்

இதே வாட்டாள் நாகரஜிக்கு ரஜினி தீவிர ரசிகர், தனக்கு பிடித்த பேச்சாளர் (!) நாகராஜ் என அன்றே பகிரங்கமாக சொன்னவர் ரஜினி

அந்த நாகராஜ் ரஜினிக்கு எதிராக நிற்பது ரஜினிக்கு வரலாற்று சோகம்

ஏற்கனவே காலா படத்தை 14 இடங்களில் வெட்டி தள்ளி இருக்கின்றதாம் சென்சார், ரஜினி படம் என்பதெல்லாம் அங்கு செல்லுபடி ஆகாத அளவு பெரும் இம்சையினை ரஞ்சித் கொடுத்திருக்கின்றார் என்கின்றார்கள்

இந்த படம் கன்னடத்தில் ஓடினாலும் வெற்றிபெறாது என்பது ரஜினிக்கு தெரிந்ததால் வாட்டாள் நாகராஜை அவரே ஏவி விட்டாலும் ஆச்சரியமில்லை

எப்படியோ கொஞ்ச நாளாக வேலை இன்றி மல்லாக்க கிடந்த வாட்டாள் நாகராஜுக்கு வேலை கிடைச்சாச்சி

இவர் கமல் படத்தையும் தடுப்பாராம், அது கூட பயமில்லை அதற்கு கமல் ஒரு மொழியில் விளக்கம் கொடுப்பார் பாருங்கள், அதை நினைத்தால்தான் பகீரென்கின்றது