பாலஸ்தீனம் மறுபடி எரிகின்றது
கொஞ்ச நாளாக அமைதியாக இருந்த பாலஸ்தீனம் மறுபடி எரிகின்றது
பாலஸ்தீன கிராமங்கள் கிட்டதட்ட 500 கிராமங்களை 1967 போரில் இஸ்ரேல் அபகரித்தது, அது முதல் ஒவ்வொரு ஆண்டும் அதை நினைவு கூர்ந்து பாலஸ்தீனியர் ஆர்ப்பாட்டம் செய்வர்
இம்முறை அந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலிய ராணுவம் சுட்டு 16 பாலஸ்தீனியர் மாண்டாயிற்று
கிறிஸ்தவர்களுக்கு பெரிய வெள்ளி என்பது யூதருக்கு பெரும் பண்டிகை, பாஸ் ஓவர் என்பார்கள். அந்த கொண்டாட்டத்தில்தான் இக்கொடுமை நிகழ்ந்திருக்கின்றது
இம்மாதிரி மக்கள் பேரணிகளை அவர்களுக்கு சொல்லி கொடுத்தவர் அராபத், உலக நாடுகளின் துணையோடு பாலஸ்தீனம் அமைய வேண்டும் அதனால் பாலஸ்தீன் மக்கள் எல்லோரும் பங்குபெறும் இண்டிபாதா போராட்டங்களை அவர் நடத்தினார்
அவர் இல்லை என்றாலும் அந்த அனாதை மக்கள் அவர் வழியிலே போராடி இன்று 16 பேரை இழந்திருக்கின்றனர்
ஒரு நாடும் இதனை கண்டிக்கவில்லை, ஈரான் மட்டும் வலுவாக கண்டித்திருக்கின்றது
நிலமை சிக்கலாகின்றது, ஹமாஸ் உறுமுகின்றது
ஒரு போராக வெடித்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை,
பாலஸ்தீன அழுகை தீரும் காலம் இப்போதைக்கு இல்லை