“உன்னை பத்தி எனக்கு தெரியாதா?

Image may contain: 4 people, people sitting

 

“உன்னை பத்தி எனக்கு தெரியாதா?

உன்னை பத்தி எனக்கு தெரியாதா?”


Image may contain: 3 people, people smiling, text

பிரபாகரனை சீமான் சந்தித்தது 8 நிமிடமே : வைகோ

ஒரு விஷயம் மறக்கடிக்கபடுகின்றது, 1991க்கு பின் பிரபாகரன் தமிழகத்திலிருந்து யாரையும் பார்க்க விரும்பவில்லை, ஒரு மாதிரியான மனநிலையில் இருந்தார்

2001 பின்லேடன் விளையாட்டிற்கு பின் உலக பார்வைகள் மாற, தன் மாவீரர் உரையில் இந்தியாவிற்கு நட்புகரம் நீட்டுவோம் என சொல்லிகொண்டிருந்தார், அவர் கையினை நீட்டிகொண்டே இருந்தார் இந்தியா தட்டிவிட்டுகொண்டே இருந்தது

ஆண்டன் பாலசிங்கம் சிறுநீரக சிகிச்சைக்காக இந்தியா வந்து அதன் மூலம் உறவை வளர்க்கும் திட்டம் இருந்தது, இந்தியா அசையவில்லை

நார்வே தூதுகுழு பேசும்பொழுது முறித்த பிரபாகரன் இந்தியா சமாதானம் பேசவேண்டும் என விரும்பினார், முழுவதும் மூளை கழன்ற ஒருவனே அப்படி சிந்திக்க முடியும்

2002 கிளிநொச்சி மாநாட்டுக்கு பின் தமிழகத்தில் மீண்டும் நற்பெயர் பெற்று உறவை வளர்க்கும் முடிவுக்கு புலிகள் வந்தனர்

தமிழக சினிமா உலகம் மூலம் உள்வரும் முயற்சி தீட்டபட்டது, இதற்கு ஐரோப்பிய ஈழத்தவரும் உதவி

இடையே திருமா போன்றவர்களையும் சந்திக்க பிரபாகரன் தவறவில்லை, அதே திருமா பின்பு ராஜபக்சே முன்பும் நின்றார், “நீர் அவன் நண்பர் அல்லவா? பங்கரில் இருந்தால் நீரும் செத்திருப்பீர்.” என பலர் முன்னிலையில் ராஜபக்சே சொல்ல சிரித்துகொண்டே நின்றார் திருமா

இந்த புலிகளின் சினிமா நுழைவில் முதலில் ஜகத்கஸ்பர் எனும் பாதிரியே திருவாசக இசை, அது இது என உட்புகுந்தார்

பிரபாக‌ரன் எனக்கு இறால் ஊட்டினார், என்னை திருப்பலி நிறைவேற்ற சொல்லி அழகு பார்த்தார் என கடும் கதைகட்டியது ஜெகத் கஸ்பர்தான்

ஆனால் ஸ்பெக்ட்ரமில் அவர் பெயர் அடிபட்டது இன்னபிற விஷயங்களால் மனிதர் அமைதி, கனத்த பணமும் சேர்ந்ததால் இன்னும் அமைதி

ஒரு திரைப்படம் புலிகளை பற்றி இயக்க வேண்டும் அது உலகெல்லாம் தமிழரிடை பாதிப்பை ஏற்படுத்தவேண்டும் என்றுதான் இங்கிருக்கும் தமிழ் இயக்குநர்களை புலிகள் அழைத்தனர்

பிரபாகரன் அவர்களை சந்திக்கவில்லை மாறாக புலிகளின் கலாச்சார குழுவே சந்தித்து அனுப்பியது, அவர்கள் யாரும் அதிகம் பேசுவதில்லை

இதில்தான் சீமானும் முதலில் சென்றார், பின் இங்கிருந்தபடி அண்ணன், நான் தம்பி என பேசி பேசி ஐரோப்பிய ஈழத்தவர் மனதை கரைத்தார்

அண்ணன் அவர்களிடம் விட்ட கப்சா என்னவென்றால் “தமிழகம் முழுக்க பிரபாகரன் பெயரே குழந்தைகளுக்கு சூட்டபடுகின்றது, பெரும் அபிமானம் உண்டு , கலைஞர்தான் மறைக்கின்றார் என்னிடம் பணமும் கட்சியும் இருந்தால் கிழித்துவிடுவேன்” என பெரும் அழிச்சாட்டியமெல்லாம் காண்பிக்கின்றார்

பிரபாகரன் காதுகளுக்கு இதெல்லாம் செல்லவே இல்லை, அவர் வேறுமாதிரி

எப்படியோ சில தொடர்புகள் மூலம் மறுபடி புலிகளின் கலாச்சார குழுவினை மறுபடி சந்தித்த சைமன் தான் ஒரு புலி என காட்ட அங்கே பல வித்தைகளை செய்கின்றார்

இதனால் பிரபாகரனை காண 5 நிமிடம் ஒதுக்கபடுகின்றது, படம் எடுத்துவிட்டு 3 நிமிடத்தில் திரும்பினார் சைமன், பிரபாகர தரிசனம் அவ்வளவுதான்

புலிகளிடம் மீடியா கட்டுபாடு அதிகம், ஒரு படம் என்றாலும் பிரபாகரன் சம்மதமின்றி வெளியிடபடாது, அப்படி சில படங்கள் காட்டபட்டன, அதில் ஒன்றை கண்டு அதிர்ந்தார் பிரபாகரன்

ஆம், அங்கிள் சைமன் கரும்புலி உடையில் சிரித்துகொண்டிருந்தார்

பிரபாகரன் சொன்னது இதுதான் என்கின்றார்கள் “யுவன் இந்த டைரெக்டர் ஒருமாதிர் ஆள் போல் தெரிகின்றது, அவன் புலி உடையில் இருக்கும் படம் வெளியிட வேண்டாம், அது இந்திய தமிழர்கள் எல்லாம் புலிகள் எனும் சர்ச்சை ஏற்படுத்தும்

என்னுடன் இருக்கும் படம் வேண்டுமானால் கொடுத்து விடுங்கள், அங்கே எப்படி நடவடிக்கை இருக்கு என பார்க்கலாம்”

நிச்சயமாக பிரபாகரன் மகா கவனமாக இருந்திருக்கின்றார், புலி உடையில் சைமன் படம் வந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை அவரால் கணிக்க முடிந்திருக்கின்றது

ஆனால் அந்த காலகட்டத்தோடு அமைதி முடிந்து யுத்தம் தொடங்கிவிட்டது

இங்கே அங்கிள் சைமன் தன் அட்டகாசத்தை தொடங்கிவிட்டார்

புலிகள் ஏக சிக்கலில் இருந்ததால் சைமனை கவனிக்க முடியவில்லை, அன்னார் பொளந்து கட்டினார். புலிகளும் அழிய அன்னாரின் தகிடதோம் தாளவில்லை

உண்மையில் பிரபாகரனுக்கு நெருக்கமானோர் வைகோ, கொளத்தூர் மணி இன்னொருவர் பழ.நெடுமாறன் இவர்களே

இவர்கள்தான் அன்றிலிருந்து கடைசி நொடிவரை பிரபாகரனோடு தொடர்பில் இருந்தவர்கள்

இதில் மணியினையும், தளர்ந்துவிட்ட பழ.நெடுமாறனையும் அசால்ட்டாக கடந்தார் சைமன், கலைஞரை அவர் திட்டுவதை இருவரும் நன்றாக ரசித்தனர் என்பது இன்னொரு விஷயம்

இந்திய செயற்கைகோள் போல கைவிடபட்ட நிலையில் இருந்த வைகோவிற்கும் என்ன செய்ய என தெரியவில்லை

இப்பொழுது வைகோ திமுக கட்டுபாட்டில் வந்தாயிற்று, சைமன் திமுகவினையும் கலைஞரையும் திட்டிய திட்டில் ஒரு புள்ளி கூட மறக்காத திமுக மறைமுகமாக சிரிக்கின்றது

பின்புலம் கிடைத்த பலத்தில் சீறிபாய்கின்றார் வைகோ

இதில் நிச்சயம் அங்கிள் சைமனின் பொய்முகம் கலையலாம், அவ்வளவு தகவல்கள் வைகோவிடம் உண்டு

பதிலுக்கு வைகோ பிரபாகரனை சந்தித்தது பொய் என்றெல்லாம் சைமனால் சொல்லமுடியாது

காரணம் ராஜிவ் கொலைவழக்கில் கைபற்றபட்ட 300க்கும் மேற்பட்ட கேசட்டுகளில் 50 கேசட்டுக்கும் மேல் வைகோ இருக்கின்றார்

ஆக சைமன் முகத்தினை கிழிக்க மிக சரியான நபர் வைகோ, அவரை விட தகுதியும் புலிகள் விஷயத்தில் உண்மையும் (அதில் மட்டும்) கொண்டவர் யாருமில்லை

சரி வைகோ இவ்வளவு நல்லவரா என்றெல்லாம் கேட்டுவிட கூடாது, அவர் சொன்ன வார்த்தையினை கவனியுங்கள் “பிரபாகரன் இல்லை என நினைத்து பேசிகொண்டிருக்கின்றார் சீமான்”

ஆக வைகோ சொல்ல வருவது பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார்

இது யாருக்கு தேவை?

புலிகள் சொத்தை பாதுகாக்கும் சிலருக்கு தேவை, அவர்கள்தான் யார் கணக்கு கேட்டாலும் பிரபாகரன் வந்தவுடன் சொல்வோம் என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்

இது புலிகள் சொத்துக்கள் தொடர்பான ஐரோப்பிய சண்டை, அதில் ஒருகுழு சைமனுக்கும் இன்னொரு குழு வைகோவிற்கும் படியளக்கும்

அவர்கள் கொடுக்கும் உத்தரவினை பொறுத்து இங்கே குதிப்பார்கள்

அதில் ஒரு குழு வசமாக சைமனின் கொடியினை குறித்து வைகோவினை கிளப்பியாயிற்று

நமக்கென்ன அடுத்த டைம்பாஸ் ரெடி