பாஜகவுடன் கூட்டணி இல்லை, காங்கிரசுடன் கூட்டணி : டிடிவி தினகரன்

பாஜகவுடன் கூட்டணி இல்லை, காங்கிரசுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கின்றது : டிடிவி தினகரன்

இந்த அசைன்மென்டுக்காக தமிழக காங்கிரஸ் தலைவராக கொண்டுவரபட்டவர்தான் திருநாவுக்கரசர்

இப்பொழுது அந்த பணி முடிவடையும் நேரமிது. பொதுவாக அன்றிலிருந்தே அதிமுக காங்கிரஸ் நெருக்கம்தான் அதிகம்

இந்திராவிற்கே ராமசந்திரனை காமரஜருடன் இணைக்கும் திட்டம்தான் இருந்தது, ஆனால் காமராஜர் மறுத்தார்

ராமசந்திரன் அசாத்திய கில்லாடி கூட, ஏற்கனவே காமராஜர் அணிக்கு வந்த ஈவிகே சம்பத் கரைந்து போனதும் அவரை மிரட்டியது

இதனால் காங்கிரசின் அடிமையாக இங்கு அதிமுக இயங்கும் என்ற ஒப்பந்தத்துடன் அதிமுக இயக்கபட்டது

இடையில் நேருவின் மகளே வருக என கலைஞர் கூட்டணி சேர்ந்து ராமசந்திரனுக்கு அதிர்ச்சி கொடுத்தாலும் காங்கிரசின் தேர்வு எந்நாளும் அதிமுகவே

ராஜிவும், இந்திராவும் ஜெயலலிதாவினை வளர்த்தவர்கள் மறுக்க முடியாது

பின்னாளில் தேசிய அரசியல் அனுபவமில்லா ஜெயலலிதா டெல்லி ஆட்டத்தில் தோற்றார், வாஜ்பாய் அரசை கலைத்ததது, சோனியாவினை சோனியா மைனோ இத்தாலிகாரி என்றெதெல்லாம் பக்குவம் இல்லா பேச்சுக்கள்

அந்த வாய்ப்பை சிக்கென பிடித்தார் கலைஞர், ஜெயாவிற்கு இத்தாலி பார் அட்டெண்டரான சோனியோ மைனோ கலைஞருக்கு சொக்க தங்கம் ஆனார்

காங்கிரசுடன் இணைய பின்பு தூதுவிட்டார் ஜெயலலிதா, குறிப்பாக 2009ல் ஈழபிரச்சினைக்காக கலைஞர் விலகினால் அதிமுக எம்பிக்கள் காங்கிரசை ஆதரிப்பார்கள் என்றார்

ஆம் ஈழத்தாய்தான் அப்படி சொன்னார், ஆனால் காங்கிரஸ் நம்பவில்லை. கலைஞரும் அதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை

இப்பொழுது கலைஞரும் இல்லை, ஜெயாவும் இல்லை. அதிமுகவின் ஆட்சி பழனிச்சாமி பக்கம் இருந்தாலும் கட்சி இன்னமும் மறைமுகமாக தினகரன் பக்கம் இருகின்றதது, சசிகலா அணி பலமிழந்ததாக சொல்லமுடியாது

மறுபடி காங்கிரஸ் அதிமுக உறவு துளிர்க்கலாம்

கலைஞராக இருந்தால் இந்நேரம் துள்ளிகுதித்து சில காட்சிகளை நினைவுபடுத்திவிட்டு அவர்போக்கில் இருப்பார், எதிர் கூட்டணிகளை குழப்பிவிடுவதிலும் அவர் சமர்த்தர்

என்ன சொல்லியிருப்பார்

“ராஜிவ் படுகொலையில் ஆட்சிக்கு வந்த ஜெயா ஒருமுறை கூட திருப்பெரும்புதூரில் அஞ்சலி செலுத்தியவர் அல்ல‌

இந்திராவின் வாரிசாக இங்கு நிலைத்துவிட்ட சோனியாவினை , தியாக தலைவி சோனியாவினை தேசதுரோகி என நாகூசாமல் சொன்னவர் ஜெயலலிதா

சொக்க தங்கம் சோனியாவினை அச்சில் ஏற்றமுடியா வார்த்தைகளால் அசிங்கபடுத்தியவர் அந்த அம்மையார்

அவரின் கட்சி காங்கிரசுடன் கூட்டணிக்கு வரலாம் என்பதை, ஊழல் செய்து சிறைக்கு சென்ற அதிமுக பொதுசெயலாளார் சசிகலாவின் கட்சி காங்கிரசுடன் கூட்டணிக்கு வரலாம் என்பதை சில ஏடுகள் எழுதுகின்றன‌

மாபெரும் தியாகியான சோனியாவினை இவர்கள் அர்ச்சித்ததை, அவர்கள் காட்டாட்சியில் காங்கிரசின் மதிமுகம் ப.சிதம்பரம் தாக்கபட்டு மயிரிழையில் உயிர்பிழைத்ததை எல்லாம் காங்கிரசார் மறந்தாலும் மக்கள் மறப்பார்களா?”

இப்படி சில விஷயங்களை கொளுத்தி போட்டால் அதன் பின் காங்கிரஸ் கூட்டணிக்கு எத்தனை முறை யோசிக்கும் தெரியுமா?