இந்தியா மீது போர்தொடுத்தா காவேரி மீட்பார்கள்?


அண்ணே அடிச்சி கேப்பாக, அப்பவும் போய்ராதீக, மிதிச்சி கேப்பாக அப்பவும் போய்ராதீக..
தமிழகத்தை நாங்களே காப்பாற்றுவோம், மாநில நலனை விடவே மாட்டோம் என்றுதான் வாக்கு கேட்டார்கள், ஆட்சிக்கும் வந்தார்கள், எதிர்கட்சியிலும் அமர்ந்தார்கள்
இப்பொழுது காங்கிரஸ் சதி, மோடி சதி என ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்கின்றார்கள்
இதற்கு நேரடியாக இம்மக்கள் காங்கிரசுக்கோ பாஜகவிற்கோ வாக்களிக்கலாம், இடையில் இவர்கள் எதற்கு?
இவர்கள் இருந்து நமக்காக டெல்லியில் உரிமை பெற்று தருவார்கள் என அமர்த்தினால் அவர்கள் நம்மையும் போராட வா என்கின்றார்கள்
எல்லோரும் போராட கிளம்பினால் டெல்லிக்கும் தமிழக மக்களுக்கும் இடையில் இவர்கள் எதற்கு? ஏன் அரசியலுக்கு வரவேண்டும்
எங்களுக்கு வேலை வெட்டி இல்லை 24 மணிநேரமும் உங்களுக்காக உழைப்போம் என்றுதான் வாக்கு கேட்டு வந்தார்கள், அவர்களை அமர்த்திவிட்டு மக்கள் வேலை வெட்டி பார்க்கலாம் என்றால் ஏய் கடையை மூடு, தெருவினினை மூடு என அழைப்பு
பின் எதற்கு இவர்களை எம்.எல்.ஏ , எம்பி முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் என வைத்திருக்கின்றது?
எல்லா உரிமையும் மக்கள் போரடி வாங்க இவர்களுக்கு எதற்கு வோட்டு?
இதில் இப்பொழுது தனிநாடு வேறு வேண்டுமாம்
இப்பொழுதாவது நீதிமன்ற நம்பிக்க்கை உண்டு, கர்நாடக தேர்தல் முடிந்தால் காட்சி மாறும். இன்னும் பல நம்பிக்கை உண்டு
ஆனால் தனிநாடு ஆகிவிட்டால் இந்தியா மீது போர்தொடுத்தா காவேரி மீட்பார்கள்?
காவேரிக்காக தனிநாடு கண்டால் அதன்பின் காவேரி வரவே வராது , மழைக்கால காவேரி கூட அதன்பின் வராது
கிட்டதட்ட 50 ஆண்டுகாலம் ஆண்டாகிவிட்டது, இடையில் மத்திய ஆட்சியிலும் அமர்ந்தாகிவிட்டது ஆனாலும் காவேரி நீர் வரவில்லை என்றால் யார்தவறு?
அந்த தோல்வியினை ஒப்புகொள்ள அல்லது பழியினை மறைக்க ஆளாளுக்கு உண்ணும் விரதம், ஆர்ப்பாட்டம் என கிளம்பிவிட்டார்கள்