சாமி ஆடி மனைவியை உதைத்த கணவன்
நிலக்கோட்டை அருகே இருக்கின்றது ஆவாரம்பட்டி கிராமம், அங்கே ஒரு கணவருக்கு மனைவி மீது தீரா கோபம் இருந்திருக்கின்றது
நன்றாக திட்டமிட்டிருக்கின்றார், கோவிலுக்கு அழைத்து சென்றிருக்கின்றார். அங்கே சாமி வந்து ஆடியவர் அடுத்து செய்ததுதான் அட்டகாசம்
“டேய் நா சாமிடா, என் மகனையே கொடுமை படுத்துவியா…” என மனைவியினை போட்டு அடித்திருக்கின்றார், அடி என்றால் செமத்தியான அடி, கல்லில் எல்லாம் தள்ளி அடித்து படுகாயமான அடி
நன்றாக அடித்துவிட்டு சாமிஆடி முடித்துவிட்டு மயங்கி சரிந்து எழுந்து “அய்யய்யோ என் பொண்டாட்டிய சாமி அடிச்சிட்டே..” என அழுது ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றார்
சாமி ஒருகாலமும் இப்படி செய்யாதே என சந்தேகபட்ட மக்கள், மனைவியினை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றார அரசு மருத்துவமனை காவல்துறைக்கு சொல்லிவிட்டது
சாமி அவருக்கு மட்டும்தான் இறங்குமா? காவல்துறைக்குள் இறங்காதா? இறங்கிவிட்டது.
மனைவியினை அடிக்கும்போது அந்த மனிதருக்குள் இருந்த சாமி, போலிஸ் அடியில் அவருக்குள் வர மறுத்துவிட்டது
விஷயம் சிக்கலாகி மனிதருக்குள் சாமியே வரவில்லை என கண்டறிந்துவிட்டார்கள், இனி மனைவி மருத்துவ மனையில் இருந்து திரும்பியவுடன் அவருக்குள் சாமி இறங்கலாம்
ஆனால் கொஞ்சம் கூட சந்தேகம் வராமல் சாமியாடி, அதன் பின் அழுதும் உருண்டு புரட்ட அவரை கோடம்பாக்க ஆசாமிகள் தேடி பிடித்தால் நல்லது
ஒரு நல்ல நடிகன் மனைவி மருத்துவமனையில் இருந்து வந்தபின் இருக்க போகின்றானோ இல்லையோ, அதனால் அத்திறமையாளனை கோடம்பாக்கம் தக்கவைத்துகொள்வது நல்லது.