காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ்குமார்

Image may contain: 1 person

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடக்கின்றன, 72 நாடுகள் பங்கேற்றிருக்கின்றன‌

முன்னொரு காலத்தில் பிரிட்டனுக்கு கீழ் இருந்த நாடுகளின் அமைப்பு அது, அதனால் அவர்கள் ஆண்ட 72 நாடுகள் வந்திருக்கின்றன‌

இதில் அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மன், பிரான்ஸ், சீனா எல்லாம் வராது. அவைகள் விளையாட்டில் சூரர்கள். அப்படி இருந்ததால்தான் பிரிட்டன் ஆட்சிக்கு அடங்காமல் இருந்திருகின்றார்கள்

அவர்களுக்கு அடங்கிய அப்பாவி 72 தேசங்கள் இப்பொழுது விளையாடுகின்றன, இதில் கனடாவும் ஆஸ்திரேலியாவும் முன்னணி

இந்தியா 3 தங்கங்களை வென்றாயிற்று. இதில் தமிழக வீரர் சதீஷ் பெற்றுகொடுத்திருகின்றார். இவர் வேலூர் மாவட்டத்துக்காரர்

கடந்த காமன்வெல்த் பிரிவிலும் இவர் 77 கிலோ பிரிவில் தங்கம் வென்றவர்

இவர் தங்கம் வென்றது பெரிய விஷயம், வாழ்த்துக்கள்

ஆனால் இனி இவர் எப்படி தமிழகம் திரும்புவார்?

இங்கே ஐபில் ஆட்டத்தை புறக்கணிக்க சில கோஷ்டிகள் கிளம்புகின்றது, அப்படி புறக்கணித்தால் கவனம் கிடைக்குமாம்

அந்நிலையில் இந்த சதீஷை என்ன சொல்வார்கள்?

“டேய் துரோகி, காவேரி வேண்டாமா? நீ தமிழனா?. உண்மை தமிழன் என்றால் எடை தூக்கமாட்டேன் புறக்கணிக்கின்றேன் என சொல்ல வேண்டாமா

அந்த மேடையில் தங்கபதக்கம் வாங்கும்பொழுது மறுத்து ஏ சர்வதேசமே காவேரியினை விடு என சொன்னால் எவ்வளவு கவனம் கிடைத்திருக்கும்?” என அவரை குதறிவிட மாட்டார்களா?

நிச்சயம் செய்வார்கள் , அதனால் அந்த சதீஷ்குமார் ஆடிமாதம் காவேரி மழைபெய்து வந்தபின் வந்தால் போதும்

இங்கே நிலை அப்படித்தான் காவேரி வருமளவும் எந்த ஆட்டமும் ஆட கூடாது

ஆனால் புதுபடம் வரலாம், டாஸ்மாக் இயங்கலாம், தமிழகமெங்கும் ரிசார்ட்டுகள் , உல்லாச தளங்கள், நட்சத்திர விடுதிகள், கேளிக்கை மையங்கள் எல்லாம் இயங்கலாம்

ஆனால் விளையாட்டு மட்டும் கூடாது