மவுன சாமியாராக வேடம் தரித்து அமர்ந்தனர் நடிகர்கள்

Image may contain: 1 person, beard

ஏதும் பேசினால் பெங்களூரில் படம் ஓடாது, வாட்டாள் நாகராஜ் பொங்கிவிடுவார் ஆனால் காவேரி விவகாரத்தில் ஏதும் செய்ததாக செய்திவரவேண்டும் என யோசித்த நடிகர்களுக்கு கன்னடத்தில் நாம் இருந்தால் என்ன செய்வோம் என்ற சிந்தனையில் “மவுன போராட்டம்” உதித்திருக்கின்றது

ஈழம் என்றாலோ இன்ன பிற சிக்கல் என்றாலோ குதிப்பவர்கள் இப்பொழுது பேசா மடந்தை அல்லது மடந்தன் ஆகிவிட்டார்கள்

இதில் இன்னமும் கவனித்தால் கன்னடரான பிரகாஷ்ராஜ் , முரளி மகன் அதர்வா , பிரபுதேவா குடும்பம் என பலரை காணவில்லை

ஒழுங்காக குறித்து வைக்க வேண்டிய நேரமிது, தும்பிகள் இதனை எல்லாம் குறிக்காது அல்லது தெரியாது. ரஜினி வந்ததால் கடும் அப்செட்

இப்படியாக மவுன சாமியாராக வேடம் தரித்து அமர்ந்தனர் நடிகர்கள் , மேக் அப் போடாத நடிப்பு அவ்வளவுதான்

உண்மையில் காவேரி விவகாரத்தில் அவர்களால் ஒரு கருத்தும் சொல்லமுடியாது, இதனால் மவுனமாக அமர்ந்துவிட்டார்கள், அட்டகாசமான நடிப்பு

இதில் சத்தியராஜ் கடைசியாக பேசும்பொழுது ராணுவத்திற்கு பயபடமாட்டோம் என்றாராம், ராணுவத்தை கன்னடத்திற்கு அனுப்பி அணைகளை திறங்கள் என சொல்லியிருக்கலாம்

மனிதர் என்னமோ சொல்லபோக, ராணுவம் எதற்கு உங்களை மிரட்ட வருமானவரி குழு போதாதா என வசமாக கலாய்த்திருக்கின்றார் தமிழிசை

ஆக அம்மணி வருமானவரி குழு இருப்பதே பலரை மிரட்ட என்பதை ஒப்புகொண்டுவிட்டார், வாழ்த்துக்கள்

இவர்கள் ஒருபக்கம் பேசாத கொடுமை என்றால், இன்னொரு பக்கம் சிம்பு பேசும் கொடுமை

உளறி தள்ளுகின்றார், கன்னடரிடம் கேட்டால் நீர் கொடுப்பார்களாம். மாண்டியா மாவட்ட விவசாயிகள் செய்யாத எதிர்ப்பா? இன்னும் கன்னட விவசாயிகள் இங்கு நீரில்லை என வைக்கா ஒப்பாரியா?

ஏதோ பாகிஸ்தான் காஷ்மீர் நிலமை போல காவேரியினை ஒப்பிட்டிருக்கின்றார், உச்சகட்ட அபத்தம்

ஆனால் சிம்பு வழக்கமாக அடிப்பேன் உடைப்பேன் தமிழன் என வசனம் பேசுபவர், ஏன் இப்படி பல்டி அடித்துவிட்டார்?

ஆக சிம்புவின் ரகசிய கேள்பிரண்ட் யாரோ கன்னடத்தி என்பது புலனாகின்றது. இதுவும் விட்டுபோய்விட கூடாது என்பதால் மனிதர் மிக கவனமாக பேசுகின்றாராம்


ஐ.பி.எல். போட்டியை நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – சீமான் எச்சரிக்கை

இந்த சமந்தா நடித்த சாவித்திரி கதையின் படத்து போஸ்டர் வெளியிட்டு இருக்கின்றார்களாம், அதை பற்றி எல்லாம் அங்கிள் பேசமாட்டார்


நியூட்ரினோ அணுவுலை போல ஆபத்தான திட்டம் அல்ல : தமிழிசை

அக்கா என்ன சொல்கின்றார் என்றால் அணுவுலை மகா ஆபத்தான திட்டம், அந்த அளவு நியூட்ரினோ ஆபத்து இல்லை என்கின்றார்

நியூட்ரினோவிற்கு பதிலாக அணுவுலையினை மூட முன்வருவீர்களா அக்கா?

பதில் கொடுக்கின்றொம் எனும் பெயரில் பல உண்மைகளை ஒப்புகொள்ளும் பெருந்தன்மை இவரைவிட்டால் யாருக்கு வரும்?