உலகெல்லாம் இணையதளம் ஊடுருவபடுவதும் , அவைகளின் தகவல் திருடபடுவதும்…
ஒரு பெரிய சிக்கலை ஓசைபடாமல் இத்தேசம் மறைக்கின்றது, நடந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல
உலகெல்லாம் இணையதளம் ஊடுருவபடுவதும் , அவைகளின் தகவல் திருடபடுவதும் அது மிக முக்கிய தகவலாயின் அதனை வைத்து மிரட்டுவதும் இன்றைய ஸ்டைல்
இதற்கென சில நாட்டு அரசுகளே குழுக்களை வைத்துள்ளன,மாபெரும் கணிணி மூளைகளை வைத்து இந்த ஆட்டத்தை நடத்துகின்றன
வடகொரியாவும் , சீனாவும் இதில் முதலிடம் என்றாலும் இந்த அட்டகாசத்தை முதலில் தொடங்கி வைத்தது அமெரிக்கா, அதுவும் 2001க்கு பின்னால் அமோகம்
இதனை மெதுவாக மோப்பம் பிடித்த நாடுகள் அதே பாணியில் இறங்கின
இதில் பலநாட்டு அதிமுக்கிய தளங்கள் ஊடுருவபட்டு தகலல் திருடபட்டன
இப்பொழுது இந்தியாவிலும் அது நடந்திருக்கலாம் என்கின்றார்கள். மிக முக்கிய இணையதளங்கள் முடக்கம் என செய்திகள் சொல்கின்றன
இதனை பெட்டி செய்தியாக கடந்து செல்லமுடியாது, ஏதோ நடந்திருக்கின்றது. ஏதோ பகைநாடு ஒன்று தன் ஆட்டத்தை ஆடியிருக்கின்றது
அது என்னென்ன தகவல்களை திருடியது என தெரியவில்லை, ஆனால் சும்மா வந்துவிட்டு சென்றிருக்கமாட்டார்கள்
மிக பெரும் கணிணி அறிவினை கொண்ட இந்தியர்களை கொண்ட இந்தியா இப்படி கோட்டைவிட்டிருப்பது நிச்சயம் அவமான செயல். இனியாவது தக்க பாதுகாப்புகளை செய்யட்டும்
இப்பொழுதுள்ள காலத்தில் பாதுகாப்பு என்பது ராணுவத்தால் மட்டுமல்ல, தகவல்களை பாதுகாப்பது என்பதே பெரும் சவால். டிஜிட்டல் யுகத்தில் எப்படியேயினும் ஊடுருவுவார்கள்
இந்த சவால் ரஷ்யாவிற்கு அன்றே வந்தது, புட்டீன் என்ன செய்தார் தெரியுமா? தன் அலுவலகத்தின் கம்பியூட்டர்களை எல்லாம் தூர எறிந்துவிட்டு மறுபடி டைப்ரைட்டர் கொண்டுவந்துவிட்டார்
அதில் எப்படி எங்கோ இருந்து கொண்டு ஊடுருவ முடியும்?, புடீன் தனித்து நிற்பது இப்படித்தான்
என்னென்ன ரகசியங்களை இந்திய எதிரிகள் திருடினார்களோ தெரியவில்லை, நமக்கு தெரியபோவதுமில்லை
ஆனால் ஏதோ பெரும் ஊடுருவல் நடந்தது மட்டும் உண்மை