நாம கோர்ட்டில் என்ன சொல்ல போறோம் பாஸ்?
காவிரி விவகாரம் – வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு : செய்தி
“நாம கோர்ட்டில் என்ன சொல்ல போறோம் பாஸ்?
இன்னும் கொஞ்சநாளையில் ஆட்சிவிட்டு போய்விடுவோம், இனி வரவே மாட்டோம் அதனால் ராகுல்காந்தியிடம் கேளுங்கள் என சொல்லிவிட்டு வந்துவிடுவோம்
அதானே நம்மிடம் ராமர்கோவில் திட்டம் பற்றி கேட்டாலே சொல்ல ஒன்றுமில்லை, இதில் காவேரி பங்கீடு என்றால் எப்படி?, நீங்க சொல்றதுதான் சரி பாஸ்”
புதிதாக அமையபோகும் கன்னட அரசின் நிம்மதி காவேரி சிக்கலால் இப்பொழுதே போய்விட்டது.
கன்னடரை சமாதனபடுத்தி, உச்சநீதிமன்ற தீர்ப்புபடி தமிழகத்திற்கு தண்ணீர்விடுவது எளிதில் நடக்கவே நடக்காத ஒன்று
அதனால் இந்தமுறை எடியூரப்பா முதல்வராக வேண்டும் என சித்தராமய்யாவும், சித்தராமய்யா முதல்வராகவேண்டும் என எடியூரப்பாவும் விரதம் இருந்து வேண்டுவதாக தகவல்