இழவு வீட்டில் IPL தேவையா? : பாரதிராஜா

காவேரிக்காக ஐபில் கிரவுண்டை மூடுவது எல்லாம் தீர்வினை தராது

தீர்வு வேண்டுமானால் தமிழக அரசு டாஸ்மாக்கினை காலவரையின்றி மூடலாம்

ஒரு நாள் டாஸ்மாக்கை அடைத்தாலே அலைமோதும் குடிமகன்கள் பொங்கும் காட்சி தமிழகமெங்கும் தெரிகின்றது

தமிழ்நாட்டில் டாஸ்மாக் அடைப்பென்றால் மேற்கு தொடர்ச்சி மலையினை தூக்கி எறிந்துவிட்டு கேரளா செல்ல தயாராகும் வெறிபிடித்த கும்பல் அது

டாஸ்மாக் மட்டும் அடைத்துவிட்டால் அவர்கள் மதம்கொண்ட யானையாக எதனையும் துவம்சம் செய்ய தயார்

இதில் கன்னட அணைகள் எம்மாத்திரம்?

இனி காவேரி வந்தால்தான் டாஸ்மாக் திறக்கபடும் என தமிழக அரசு அறிவிக்கட்டும், மறுநொடி காவேரியினை கயிறுகட்டி இழுத்துவர குடிமக்கள் படை கிளம்பும்

அது மாபெரும் வெற்றியோடு திரும்பும், அப்படி திரும்பாவிட்டால் கூட தமிழகத்திற்கு இன்னும் நல்லது.


இழவு வீட்டில் IPL தேவையா? – பாரதிராஜா.

காவேரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்து கன்னடத்தில் தமிழருக்கான கலவரம் வெடித்தபொழுதுதான் “கிழக்கு சீமையிலே” படம் வந்து பல கோடி வசூல் செய்தது

அப்பொழுதெல்லாம் யழவு வீட்டில் திரைப்படம் எதற்கு என அன்னார் கேட்கவில்லை