என்னது? அக்கா தென்னகத்து ஜான்சி ராணியா?

என்னது? அக்கா தென்னகத்து ஜான்சி ராணியா?
விரைவில் அக்கா ஜான்சி ராணி போல அடித்து கொல்லபட போகின்றார் என அவர்களே முடிவு செய்துவிட்டார்கள் போல
அக்கோவ் கொஞ்சம் கவனமாக இருங்கள்…
கருப்பு கொடி என்பது பிரிட்டன் பாணி. இந்திய யதார்த்தபடி கருப்பு என்பது மங்கலம், பெண்கள் கூட கருப்பு கருக மணிதான் அணிவார்கள் : எச்.ராசா
ராமன் கருப்பு, கண்ணன் கருப்பு, எமத்ர்மன் கருப்பு இன்னும் பல சாமிகள் கருப்பு
ஏன் அக்கா தமிழிசை கூட கருப்பு , ஆக கருப்பு என்பது இந்துக்களின் அடையாளம் என்பதை ராசா சொல்ல மறந்துவிட்டார்
இருந்தாலும் ராசா இப்படி சொல்லியிருக்கலாம்
கோர்ட்டில் கூட நீதியினை நிலைநிறுத்த கருப்பு கவுண் அணிகின்றார்கள், ஆக மோடி வரும்பொழுது கருப்புகொடி காட்டுவது மோடி நீதியினை நிலை நிறுத்துவார் என்பதற்காக என்றால் எப்படி இருந்திருக்கும்?
ஒரு முறை ஜெயலலிதாவை எதிர்த்து பேசினேன் : செல்லூர் ராஜூ
ஆமாம், ஜெயாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு “இன்னும் எழும்பாமல் என்ன செய்கின்றீர்? முதல்வருக்கு பொறுப்பு வேண்டாமா?” என எதிர்த்து கேட்டவர்.