இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சி : போராளிகள்

போராட்ட மன நிலையில் உள்ள இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சி : போராளிகள்

அப்படி எந்த கிரிக்கெட் வீரன் இங்கு ஆண்டுவிட்டான் என்பதுதான் தெரியவில்லை

1960களில் தமிழர் போராட்ட மனநிலையில் இருந்தனர், உயிரை கொடுத்து போராடும் அளவு உணர்ச்சி இருந்தது

பின் அந்த உணர்ச்சி சினிமாவால் பாழானது, போர் முரசு கொட்ட வேண்டியவர்கள் நாடக ஆர்மோனியம் வாசித்தனர், போர்களம் புகவேண்டிய கால்கள் சலங்கை கட்டி ஆடின‌

இப்படியாக தமிழக போர்குரல் பின் சினிமா குரலாக மாறி நாசமாயிற்று

இப்பொழுது கிரிக்கெட் இளைஞர்களை மாற்றுமாம், சொல்ல வந்துவிட்டார்கள்

என்றோ சில வருடங்களுக்கு ஒருமுறை கிரிக்கெட் ஆட்டம் இங்கு நடைபெறும்

அது என்ன சினிமா போல அனுதினமும் 4 காட்சி என 100 நாள் நடக்குமா? இல்லை டாஸ்மாக் போல தினமும் திறக்குமா?

அத்தி பூத்தது போன்று அதுவும் 3 மணிநேரத்தில் நடக்கும் போட்டி

அதற்குத்தான் இந்த ஆர்பாட்டாம்

தியேட்டரை மூடிவிட்டு வா போராட என எவனாவது அழைப்பானா?

டாஸ்மாக்கை மூடு, காவேரி வரும்வரை உனக்கேன் மயக்கம் என எவனாவது சொல்வானா?

சொல்லமாட்டான்

சர்வதேச கவனம் பெறவேண்டுமென்றால் இதோ பிரிட்டன், அமெரிக்க விமானம், கப்பல் எல்லாம் தமிழகம் வருகின்றன அவற்றை விரட்டுவானா?

ஐபில் என்றால் மட்டும் பொங்குவார்களாம், இது நிச்சயம் உள்நோக்கம் கொண்டதன்றி வேறல்ல‌