சிரியாவின் ஷரின் எனப்படும் ரசாயாண குண்டுகள்
சிரியாவின் ஷரின் எனப்படும் ரசாயாண குண்டுகளை வீசி சிரிய படைகள் தாக்குகின்றதாம், இது மானிட நலனுக்கு எதிரானதாம் அதனால் அமெரிக்கா சும்மா விடாதாம். சிரிய அரசை பிரித்து மேய போகின்றதாம்
இந்த கொடூர ரசாயாணம் யுத்தகளத்தில் பயன்படுத்த கூடாது என்கின்றது சர்வதேச விதி
ஆனால் 2009ல் ஈழ இறுதி யுத்தத்தில் இதே நச்சு ஆயுதம் பயன்படுத்தபட்டது. ஆனந்தபுரத்து இறுதிபோரில் பின் வாங்கிய சிங்கள ராணுவம் ஒரு கட்டத்தில் தோற்கும் நிலையில் இருந்தது
அப்பொழுதுதான் இந்த நச்சு ரசாயாண ஆயுதங்களை இலங்கை ராணுவம் வீசியது. இவ்வகை ரசாயாண ஆயுத தடுப்புமுறை இல்லா புலிகள் மொத்தமாக அழிந்தனர்
இந்த ஷரின் ஆயுதம் பாவிக்காபடாவிட்டால் 2009ல் ஈழ யுத்தம் நின்றிருக்காது, புலிகள் இறுதி நேரத்தில் மிக தீவிரமாகவே போரிட்டனர். அப்பொழுதுதான் உக்கிர தாக்குதல் தொடங்கினர்
அதை இவ்வகை ஆயுதத்தை கொண்டு முடித்தது சிங்களம்,
அன்று சிங்களம் இதே ரசாயாண ஆயுதத்தை பயன்படுத்தியபொழுது பார்த்து கொண்டிருந்தது அமெரிக்கா
இன்றுமட்டும் மனிதாபிமானம் பொத்துகொண்டு வருகின்றதாம்
புலிகளை அழிக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக அன்று இருந்திருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது
அன்றும் இன்றும் சிங்களரிடம் இம்மாதிரி கொடூர ரசாயாணம் கிடையாது,
இந்தியாவிடமும் இம்மாதிரி ஆயுதம் இல்லை
பின் சிங்களனுக்கு யார் கொடுத்திருப்பார்கள்?
இங்கே உள்ளவரிடம் கேளுங்கள், இது தெரியாதா? கலைஞர்தான் சித்த மருத்துவர்களிடம் சொல்லி தயாரித்து கொடுத்து தமிழரை கொல்ல சொன்னார் என சிரிக்காமல் சொல்வார்கள்