சீமான் மீது கொலை முயற்சி உட்பட 10 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு
சீமான் மீது கொலை முயற்சி உட்பட 10 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு
என்னது போராட்டத்திலே கொலை முயற்சியா?
இதில் ஆட்சிகனவு வேறா? அப்படியானால் ஆட்சிக்கு வந்தால் ஹிட்லர் முறைதானா?
இந்த கொலைவெறிக்கு பெயரா “தமிழ் தேசியம்”
ஆக நான் பிரபாகரனின் தம்பி என அடிக்கடி சொல்லும் சைமன் அங்கிள், ஒரு கொலை கூட செய்ய தெரியாமல் கொலை முயற்சியிலே சிக்கிவிட்டார்.
கன்னடத்தி ஜெயா ஆட்சியில் எல்லாம் கைதாகமல் டிமிக்கி கொடுத்த அங்கிள் சைமன், ஒரு பச்சை தமிழனின் ஆட்சியில் கைது செய்யபட்டு புடைப்பதற்காக கொண்டு செல்லபடுகின்றார் என்பதுதான் கொடுமை
வந்தேரி ஆட்சிதான் பாதுகாப்பானது என மனம் வருந்திகொண்டிருக்கின்றார் அங்கிள்.
சைமனோடு வந்த அவரின் அப்பா (அப்படித்தான் அவர் சொல்வார்) பாரதிராஜாவினை ஏன் விட்டுவிட்டார்கள் என தெரியவில்லை.
இனி டோல்கேட் வேல்முருகன் , இந்த மே 17 இம்சைகள் எல்லாம் வாய் திறக்கும் என நினைக்கின்றீர்கள்?
எல்லாம் எஸ்கேப், மாறுவேடத்தில் வந்து சேப்பாக்கம் கிரவுண்டில் விசில் அடிக்க தயாராகிகொண்டிருக்கும்.
நடராஜன் சாவுக்கு வராத பழனிச்சாமியினை சீண்டியது, ஏதோ 100 எம்.எல்.ஏக்களை கையில் வைத்திருக்கும் எதிர்கட்சி தலைவர் போல எடுபிடி பழனிச்சாமி என சொல்வது என பழனிச்சாமியினை சில இடங்களில் சீண்டினார் அங்கிள்.
இடம் பார்த்து அடித்துவிட்டார் முதல்வர்
ஆக பழனிச்சமிக்குள்ளும் ஒரு பாஷாபாய் ஓளிந்திருப்பது இப்பொழுது தெரிகின்றது, இன்னும் நிறையபேர் வாங்கலாம்
உள்ளே போயிருப்பது காவலர் மேல் கை வைத்த வழக்கு என்பதால் ராம்குமார் சம்பவம் அடிக்கடி வந்து அங்கிளையும் அவரின் தும்பிகளையும் பயமுறுத்திகொண்டே இருக்கும்.
ரஜினி வன்முறை சக்திகளை கிள்ளி எறிய வேண்டும் என்கின்றார், அங்கிள் சைமன் மீது கொலைமுயற்சி வழக்கு பாய்கின்றது
ரஜினி மேல் என்ன தவறு என்கின்றார் தமிழிசை
ரஜினிக்கு இருக்கும் சமூக பொறுப்பை பாராட்டுகின்றேன் என்கின்றார் ஜெயக்குமார்
இன்னும் என்ன முகமூடி வேண்டியிருக்கின்றது?
எல்லோரும் வேடம் கலைத்துவிட்டு ஒரே மேடையில் ஆஜராகுங்கள்.