சர்வதேச விண்வெளி வீரர்கள் தின வாழ்த்துக்கள்

Image may contain: 1 person, text

முதன் முதலில் விமானம் பறக்கும் உயர‌ எல்லைகளை தாண்டி விண்வெளி பற்றி கனவு கண்டவன் ஹிட்லர்

அதற்கான பிரத்யோக கலன்களை வடிவமைக்கும் திட்டத்தில் அவன் ஈடுபட்டான். அதுவரை யாரும் விண்வெளி சென்றதில்லை என்பதால் என்னென்ன தயாரிப்புகள் வேண்டும் என அவன் கோஷ்டி சிந்தித்தது

ஈர்ப்பு விசை பிரச்சினை உடலை எப்படி பாதிக்கும், காற்றே இல்லா இடத்தில் மனிதன் வாழ்ந்தால் என்னாகும்? இம்மாதிரி உடைகள் அணிந்தே இருந்தால் உடல் பாதிக்குமா? இப்படி ஏக சிக்கல் இருந்தது, அதை செயல்படுத்தி பார்க்காமல் விண்வெளி பயணம் சாத்தியமில்லை

அவனுக்கென்ன கையில் கொத்து கொத்தாக யூதர்கள் கிடைத்தார்கள்

Image may contain: 1 personஇச்சோதனை எல்லாம் அவர்களை வைத்தே செய்தான், அதாவது விண்வெளிக்கு அனுப்பி செய்யவில்லை மாறாக தயாரிப்பு சோதனைகளை அவர்களை வைத்தே செய்தான்

விரைவில் சில யூதர்களை சோதனை முயற்சியாக விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் திட்டமும் அவனுக்கு இருந்தது

எல்லாம் தயாராக இருந்தபொழுதுதான் அவனை ரஷ்யர் வீழ்த்தினர், அவனின் எல்லா ஆராய்ச்சி கூடமும் ரஷ்ய வசமாயிற்று கொஞ்சம் அமெரிக்கா பக்கமும் வந்தது

இதென்ன புதுமாதிரி விமானம்?, புது மாதிரி ஆடைகள், சோதனைகள் என அவர்கள் விசாரிக்க ஹிட்லரின் விண்வெளி கனவும், அவன் விண்வெளியினை வசப்படுத்தி நிறுவ இருந்த மாபெரும் விண்வெளி யுத்தமும் அவர்களுக்கு புரிந்தது

அமெரிக்காவும், ரஷ்யாவும் கடும் போட்டியிட்டன. முதல் வெற்றி ரஷ்யாவிற்கே கிடைத்தது. முதலில் ஸ்புட்னிக் லூனார் என அனுப்பிகொண்டிருந்த ரஷ்யா, பின் நாயினை அனுப்பியது, நாயின் பெயர் லைக்கா. இன்றும் ரஷ்யாவில் அதற்கு சிலை உண்டு

இப்படியாக அதிரடிகளை கொடுத்த ரஷ்யா இதே ஏப்ரல் 12ம் நாள் 1961 யூரி ககாரின் எனும் ரஷ்யர் விண்வெளிக்கு சென்றார்

விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் அவர்தான். இதை கண்டு மனதிற்குள் அவமானபட்ட அமெரிக்க அதிபர் கென்னடி இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்கன் நிலாவில் கால் வைப்பான் என சூளுரைத்தார்

ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கு செல்ல யூரி ககாரினின் இந்த மாபெரும் பயணமே மூல காரணம்

மானிட குலம் இதே ஏப்ரல் 12ம் தேதியில்தான் அதன் வரலாற்றில் முதன் முதலாக விண்வெளிக்கு கால் வைத்தது

தொடர்ந்து தெரஸ்கோவா எனும் பால்காரியினை விண்வெளிக்கு அனுப்பியது சோவியத். வரலாற்றின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை தெரஸ்கோவா

81 வயதாகிவிட்ட தெரஸ்கோவா இன்றும் ரஷ்யாவில் நலமாக இருக்கின்றார்

இந்நாள் விண்வெளி வீரர்களுக்கான நாள் என உலகம் குறித்துகொண்டிருக்கின்றது, உலகில் மனிதனை விண்வெளிக்கு அனுப்பிய 3ம் நாடு எனும் பெருமையினை பெற சீனா கடும் பிரயத்னம் செய்கின்றது, அந்த ஆராய்ச்சியில்தான் அவர்கள் இருக்கின்றார்கள்.

இந்தியாவில் சினிமா வெளி வீரர்கள் உண்டு, வெற்று அரசியல் வீரர்கள் நிறைய உண்டு

ஆனால் விண்வெளி வீரர்கள் மிக குறைவு, 3 பேர் கூட வரமாட்டார்கள்

முதல் இந்திய விண்வெளி வீரர் என அறியபட்டவர் ராக்கேஷ் சர்மா, பஞ்சாபியர். பொதுவாக விண்வெளி வீரர்களாக பைலட்டுகள்தான் அனுப்பபடுவார்கள், சர்மா இந்திய ராணுவ பைலட் என்பதால் அனுப்பட்டார்

இங்கிருந்து அல்ல, ரஷ்ய விண்கலம் அவரை சுமந்து சென்று விண்வெளியினை காட்டியது

இன்னொரு வீராங்கனை கல்பனா சாவ்லா, அவரின் முடிவு சோகமானது

ராக்கேஷ் சர்மாவிற்கும், கல்பனாவிற்கும் உள்ள ஒற்றுமை இருவருமே பஞ்சாபில் பிறந்தவர்கள். அந்த வீரமும் மன உறுதியும் இருவருக்கும் இருந்திருக்கின்றது

இன்று கல்பனா இல்லை

ராக்கேஷ் ஷர்மா நம்மோடு இருக்கின்றார், ஊட்டியில்தான் வசிக்கின்றார்

அவருக்கு சர்வதேச விண்வெளி வீரர்கள் தின வாழ்த்துக்கள்

இன்னும் பல விண்வெளி வீரர்கள் இந்தியாவிலிருந்து உருவாகி வரவேண்டும் என இத்தேசம் உறுதி ஏற்கட்டும்